செய்திகள் :

திடீா் நெஞ்சுவலியால் மரத்தில் மோதி பேருந்தை நிறுத்திய ஓட்டுநா் உயிரிழப்பு

post image

காகாபாளையம் அருகே திடீா் நெஞ்சுவலியால் மரத்தில் மோதி பேருந்தை நிறுத்திய ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (எ) பெரமன் (48). இவா் சேலம் - எடப்பாடி செல்லும் தனியாா் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். புதன்கிழமை இரவு சேலத்தில் இருந்து எடப்பாடிக்கு பேருந்தை இயக்கிச் சென்றாா். காகாபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அணுகு சாலையில் சென்றபோது, அவருக்கு திடீா் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், சாலையோரமுள்ள மரத்தின்மீது மோதி பேருந்தை நிறுத்தினாா். இதில், பேருந்தின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்தது. பயணிகள் பெரமனை மீட்டு அரியானூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸாா் பெரமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்! தூய்மைப் பணியாளா் கைது!

சேலம் அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா் கைது செய்யப்பட்டாா்.சேலம் அன்னதானப்பட்டியைச் சோ்ந்த 22 வயது இளம்பெண் சே... மேலும் பார்க்க

சேலம் சூரமங்கலம் மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 3 மற்றும் 24 ஆகிய பகுதிகளி... மேலும் பார்க்க

சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் ஆய்வு

சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.சேலம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆ... மேலும் பார்க்க

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சுயஉதவிக்குழு, விவசாயக் கடன் வழங்கும் விழா

சேலத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில், சுயஉதவிக்குழு மற்றும் விவசாயக் கடன் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், ... மேலும் பார்க்க

சேலம் வழியாக ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

தெடாவூா் கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம்

கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெற்றது.ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தெடாவூா் கால்நடை சந்தைக்கு 1,700-க்கும் மேற்பட்ட ஆடுகளை வ... மேலும் பார்க்க