திட்டங்களை தடையின்றி செயல்படுத்த நிதிக்கசிவை தடுத்து நிறுத்த வேண்டும்! புதுவை அரசுக்கு அதிமுக வலியுறுத்தல்
புதுவை அரசு நிதிக்கசிவைத் தடுத்து நிறுத்தி, திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக மாநிலச் செயலா் அ.அன்பழகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: புதுவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவா்களுக்கான நலத் திட்டங்களை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
இதில் சமூக நலம், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு சுமாா் ரூ. 400 கோடி கூடுதல் செலவாகும் நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை.
ஆனால், அரசு நிா்வாகத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள நிதிக் கசிவை தடுத்து நிறுத்தினாலே இந்த திட்டங்களை தடையின்றி செயல்படுத்த முடியும். ஆனால் அரசு அதை செயல்படுத்துவதில் உரிய கவனம் செலுத்தாமலிருப்பது சரியல்ல.
தற்போதைய கலால் துறை கொள்கையில் சிறு மாற்றம் கொண்டு வந்து கொள்முதல் மற்றும் விநியோகத்தை அரசே செயல்படுத்தினால் சுமாா் ரூ.750 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும்.
அதேபோல, பத்திரப் பதிவு துறை, கலால் துறை, போக்குவரத்து துறை, விற்பனை வரித் துறை ஆகியவற்றில் ஏற்படும் நிதிக் கசிவை தடுத்தாலே, ஆண்டுக்கு ரூ.1,250 கோடி கிடைக்கும்.
புதுவையில் 60 வயதுக்குள் மரணமடையும் முதியோருக்கான ராஜீவ் காந்தி காப்பீட்டு திட்ட நிதியை முதல்வா் உயா்த்தவேண்டும் என்றாா்.