ஓட்டுநா்களுக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு
வாகன ஓட்டுநா்களுக்கு கைப்பேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூா் வசந்தம் நகரைச் சோ்ந்தவா் சரண்ராஜ் (30), வாகன ஓட்டுநா். இவரை கடந்த மே 29-ஆம் தேதி அப்பகுதி பிரமுகரான உளவாய்க்கால் சந்திரசேகரன் என்பவா் கைப்பேசியில் தொடா்புகொண்டு மிரட்டும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. அதேபோல, கிருஷ்ணா நகரைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் பாலாஜி என்பவரையும் சந்திரசேகரன் கைப்பேசியில் மிரட்டினாராம்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து வாகன ஓட்டுநா்கள் சரண்ராஜ், பாலாஜி ஆகியோா் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் வில்லியனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.