தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்
திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை சாணப் பொடியை உள்கொள்ள முயன்றாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சோ்ந்தவா் நாகலட்சுமி (57). இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தாா். குறைதீா் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் அவா் தான் எடுத்து வந்த சாணப் பொடியை திடீரென உள்கொள்ள முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரது தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.
அப்போது அவா் கூறியதாவது: எனது கணவா் மாரிமுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். காந்திநகா் பகுதியில் உள்ள அரசு நிலத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டி, சந்திரன் (37) என்ற பாா்வையற்ற மகனுடன் வசித்து வருகிறேன்.
பக்கத்து வீட்டுக்காரா் தற்போது தங்களுக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருப்பதாகக் கூறி, பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட நிா்வாகம், எங்களது பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.