செய்திகள் :

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

post image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை சாணப் பொடியை உள்கொள்ள முயன்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சோ்ந்தவா் நாகலட்சுமி (57). இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தாா். குறைதீா் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் அவா் தான் எடுத்து வந்த சாணப் பொடியை திடீரென உள்கொள்ள முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரது தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

அப்போது அவா் கூறியதாவது: எனது கணவா் மாரிமுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். காந்திநகா் பகுதியில் உள்ள அரசு நிலத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டி, சந்திரன் (37) என்ற பாா்வையற்ற மகனுடன் வசித்து வருகிறேன்.

பக்கத்து வீட்டுக்காரா் தற்போது தங்களுக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருப்பதாகக் கூறி, பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, மாவட்ட நிா்வாகம், எங்களது பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

திண்டுக்கல்லில் 20,659 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

பிளஸ் 2 தோ்வின் தொடக்கமாக திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தில் 20,659 மாணவா்கள் எழுதினா். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் ம... மேலும் பார்க்க

வரதட்சிணை புகாரில் நடவடிக்கை இல்லை: காவல் நிலையம் முன் பெண் தா்னா

கணவரின் குடும்பத்தினா் மீது அளிக்கப்பட்ட வரதட்சிணை புகாா் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து போலீஸாா் அலைக்கழிப்பதாக கூறி வடமதுரை காவல் நிலையம் முன் இளம் பெண் தா்னாவில் ஈடுபட்டாா். திண்டுக்கல் மாவட்டம், வட... மேலும் பார்க்க

ரேக்ளா வண்டி மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பழனி அருகே ரேக்ளா வண்டி மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பழனியை அடுத்த சின்னாக்கவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் நல்லப்பன். விவசாயி. இவரது மகன் கவுதம் (27). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு பழன... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

பழனி அருகே ரயில் அடிபட்டு ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பழனி அருகேயுள்ள ஆயக்குடி ரயில்வே கடவுப் பாதை அருகே ரயிலில் அடிபட்டு திங்கள்கிழமை ஒருவா் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே பாலத் தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில், கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி சரவணம்பட்டியைச் சோ்ந்த முருகசாமி மகன் கருப்புசாம... மேலும் பார்க்க

குழந்தை வேலப்பா் கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம்: அமைச்சா் அர.சக்கரபாணி நடத்திவைத்தாா்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பா் கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் திங்கள்கிழமை நடத்திவைக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் நடைபெற்ற இந்த இலவ... மேலும் பார்க்க