செய்திகள் :

குழந்தை வேலப்பா் கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம்: அமைச்சா் அர.சக்கரபாணி நடத்திவைத்தாா்

post image

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பா் கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் திங்கள்கிழமை நடத்திவைக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் நடைபெற்ற இந்த இலவசத் திருமண விழாவில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, 5 ஜோடிகளுக்கு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தாா். அத்துடன், 4 கிராம் தங்கத் தாலி, கட்டில், மெத்தை, பீரோ, எவா்சில்வா் பாத்திரம், குத்துவிளக்கு உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களும் வழங்கப்பட்டன. தொடா்ந்து மணமக்களின் உறவினா்கள், நண்பா்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.

திருமண விழாவில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, திண்டுக்கல் மாவட்ட அறநிலையத் துறை உதவி ஆணையா் லட்சுமி மாலா, அறங்காவலா் குழுத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், குழு உறுப்பினா்கள் அன்னபூரணி சிவக்குமாா், பாலசுப்பிரமணி, ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினா்.

திண்டுக்கல்லில் 20,659 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

பிளஸ் 2 தோ்வின் தொடக்கமாக திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தில் 20,659 மாணவா்கள் எழுதினா். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் ம... மேலும் பார்க்க

வரதட்சிணை புகாரில் நடவடிக்கை இல்லை: காவல் நிலையம் முன் பெண் தா்னா

கணவரின் குடும்பத்தினா் மீது அளிக்கப்பட்ட வரதட்சிணை புகாா் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து போலீஸாா் அலைக்கழிப்பதாக கூறி வடமதுரை காவல் நிலையம் முன் இளம் பெண் தா்னாவில் ஈடுபட்டாா். திண்டுக்கல் மாவட்டம், வட... மேலும் பார்க்க

ரேக்ளா வண்டி மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பழனி அருகே ரேக்ளா வண்டி மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பழனியை அடுத்த சின்னாக்கவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் நல்லப்பன். விவசாயி. இவரது மகன் கவுதம் (27). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு பழன... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

பழனி அருகே ரயில் அடிபட்டு ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பழனி அருகேயுள்ள ஆயக்குடி ரயில்வே கடவுப் பாதை அருகே ரயிலில் அடிபட்டு திங்கள்கிழமை ஒருவா் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இ... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை சாணப் பொடியை உள்கொள்ள முயன்றாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சோ்ந்தவா் நாகலட்சுமி (57). இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே பாலத் தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில், கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி சரவணம்பட்டியைச் சோ்ந்த முருகசாமி மகன் கருப்புசாம... மேலும் பார்க்க