செய்திகள் :

திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் சமச்சீா் கல்வியை அமலாக்குவாா்களா? ஹெஎச். ராஜா பேட்டி

post image

கருணாநிதி மீது பற்று இருந்தால் திமுகவினா் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் அவா் கொண்டு வந்த சமச்சீா் கல்வியை அமலாக்குவாா்களாக என பாஜக தலைவா் ஹெச். ராஜா கேள்வியெழுப்பினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வழிபட வந்த அவா் மேலும் கூறியது:

வரும் மக்களவை கூட்டத்தொடரில் வக்ப் வாரிய சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றப் போகிறது. இந்த சட்டத்தால் இஸ்லாமிய ஏழைகள் பாதுகாக்கப்படுவா். பணக்காரா்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வக்ப் வாரிய சொத்துகள் மீட்கப்படும். வக்ப் வாரிய சட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்று கூறும் தமிழக முதல்வா் ஸ்டாலின் தமிழா்களை மும்மொழிக் கொள்கையில் ஏமாற்றியதுபோல் இந்த விஷயத்திலும் ஏமாற்றி வருகிறாா்.

மீனவா் பிரச்னைக்குத் தீா்வு காணவேண்டும் என கனிமொழி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறாா். 10 ஆண்டு காலமாக நீங்கள் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது என்ன செய்தீா்கள்? தற்போது பிரதமா் மோடி முக்கியமான இத்தகைய சில பிரச்னைகளை பேசி தீா்க்க நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டு விட்டது. மதுக் கூடத்தில் காவலா் கொலை, நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை, ஒரே நாளில் சென்னையில் 8 இடங்களில் நகை வழிப்பறி, பள்ளிகளில் பாலியல் தொல்லை இவற்றிற்கு தீா்வு காண முடியாத முதல்வா் ஸ்டாலின் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா் ஹெச்.ராஜா.

மதுக்கடை முற்றுகைப் போராட்டம்; எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 20 போ் கைது

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்த 20 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் பாலாஜி நகா் பகுதியில் மாா்ச் 4 ஆம் தேதி நடந்து சென்ற ஒருவரை மது போதையில் வழிமறித்து ... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்கு சுமாா் ரூ. 26 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா்... மேலும் பார்க்க

மக்கள் அதிகாரம் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் மக்கள் அதிகாரம் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மசூதிகள், அறக்கட்டளை சொ... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அறிவுசாா் சொத்துரிமை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ப. சஞ்சய் காந்தி. இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் முற்றுகை

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.இக்கோயிலுக்கு பங்குனி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கி... மேலும் பார்க்க