செய்திகள் :

”திமுக ஆட்சி மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது”-சீமான்

post image

தஞ்சாவூரில் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பெ.மணியரசன், சீமான், கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக சீமான் பேசியதாவது, "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என கருணாநிதி முழங்கினார். ஆனால், தற்போது மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என திமுக மாறிவிட்டது. மக்கள் ஆட்சியைத் தான், தன்னுடைய மக்கள் ஆட்சியாக மாற்றவிட்டனர் திமுகவினர்.

சீமான்

மாநில சுயாட்சி என பேசிக்கொண்டே மாநிலத்தின் எல்லா உரிமைகளையும் பறிக்கொடுத்துவிட்டனர். இன்று மாநில சுயாட்சி நாயகன் என பாராட்டு விழா நடத்துகின்றனர். தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, தமிழில் அரசாணை என கூறுகிறது. இத்தனை ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். எதற்கெடுத்தாலும் திராவிடர்கள் நாங்கள்தான் காரணம் என்கிறார்கள். நமது வாக்குகளை வாங்கிக்கொண்டு, வலிமை பெற்று அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு, இந்த இன மக்களின் உரிமைகளை பறிக்கொடுத்தவர்கள் இந்த ஆட்சியாளர்கள்.

பிரதமர் மோடி தமிழ் மொழியை பெருமையாகப் பேசுகிறார். உலக நாடுகளில் தமிழை கற்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் தமிழ் இன்று இவர்களின் காலடியில் குறுகிக் கிடக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இல்லாத அதிகாரம், ஒரு நியமன உறுப்பினரான ஆளுநருக்கு எப்படி வந்தது. இது மக்கள் கோட்பாடுகளுக்கு எதிரானது. இது குறித்துப் பேசத் துப்பில்லை.

தமிழ்த்தேசிய பேரியக்கம் நடத்திய கூட்டரசுக் கோட்பாடு மாநாடு

நாம் தமிழர் கட்சியை பாஜகவின் பி டீம் என கூறியது திமுகதான். ஏனென்றால் பாஜக வின் ஏ டீம் திமுக தான். நீட் தேர்வு, ஜிஎஸ்டியைக் கொண்டு வந்தது காங்கிரஸ். கூட இருந்து கும்மி போட்டது திமுக தான். சமூக நீதி, மாநில சுயாட்சி, மாநில உரிமை எல்லாம் வெற்று வார்த்தைகள். மாநில சுயாட்சி எனக் கூறி எல்லாவற்றையும் பறிகொடுத்தவர்கள் திமுகவினர். கல்வி மாநிலப்பட்டியலில் இருந்தது. அதை மத்திய அரசு எடுத்தபோது திமுக அமைதியாக இருந்துவிட்டது.

காஷ்மீரில் ராணுவ முகாம் இருந்த பகுதியில் ராணுவ வீரர்களை கொன்றது எப்படி, பின்னர் ஆதார் கார்டு எதற்கு, என்ஐஏ அமைப்பு எதற்கு. எல்லையில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். பஹல்காமில் 200 கி.மீ. தூரம் எப்படி உள்ளே வந்து தீவிரவாதிகள் சுட்டனர். வந்தவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டிருந்தால் அது பெருமை கொள்ளக்கூடிய விஷயம்" என்றார்.

Stalin: "சட்டமன்றங்களை முடக்கும் முயற்சியா?" - ஸ்டாலின் முன்வைத்த 3 கேள்விகள்!

ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள குறிப்புகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.அவரது சமூக வலைத்தள பதிவில், "... மேலும் பார்க்க

TVK : 'பாஜக-வுடன் கூட்டணியா? விஜய் தான் முடிவு செய்வார்!' - தவெக விளக்கம்

'தவெக பத்திரிகையாளர் சந்திப்பு!'வக்ஃப் திருத்த மசோதா தொடர்பாகவும், தமிழக வெற்றிக்கழகம் தொடந்திருக்கும் வழக்கு தொடர்பாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் CTR நிர்மல் குமார் செய்தியாளர்... மேலும் பார்க்க

Pakistan: "சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - பாகிஸ்தான் கோரிக்கை

சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி பாகிஸ்தான் கடிதம் எழுதியிருப்பதாக என்.டி.டி.வி தளம் தெரிவிக்கிறது.பாகிஸ்தான் நீர் மேலாண்மை அமைச்சகம் இந்திய அரசுக்கு... மேலும் பார்க்க

NCP : `இறங்கி வந்த சரத் பவார்; கைவிரித்த அஜித் பவார்..!' - அணிகள் இணைப்பில் பின்னடைவு?

மகாராஷ்டிராவில் 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்தது. அஜித் பவார் அணிக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்ததால் அவரது அணியை தேர்தல் கமிஷன் உண்மையான தேசியவாத ... மேலும் பார்க்க

Candidate list ரெடி பண்ணும் K.N Nehru, E.V Velu டீம்? DMK-க்கு, Ramadoss தூது? | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒன்பது பேருக்கு, 'சாகும் வரை சிறை' என்ற தீர்ப்பை கொடுத்து உள்ளது கோவை மகளிர் நீதிமன்றம். இதை வைத்து, 'இந்த ... மேலும் பார்க்க