செய்திகள் :

திமுக எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றியை உறுதிப்படுத்திய சென்னை உயர்நீதிமன்றம்!

post image

மத்திய சென்னை தொகுதியில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்தாண்டு மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி, திமுக எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்குரைஞர் எம்.எல். ரவி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட வழக்குரைஞர் எம்.எல். ரவி, தயாநிதி மாறனுக்கு எதிரான மனுவில் கூறியதாவது, மக்களவைத் தேர்தல் பிரசாரம் ஏப். 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஏப். 19 ஆம் தேதியிலும் பத்திரிகை வாயிலாக விளம்பரம் வெளியிட்டு, தயாநிதி மாறன் பிரசாரம் மேற்கொண்டார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது.

அதுமட்டுமின்றி தேர்தலுக்கான பிரசாரச் செலவு, விளம்பரச் செலவு, பூத் ஏஜென்டுகளுக்காக செலவிடப்பட்டது குறித்து தயாநிதி மாறன் தெரிவிக்கவில்லை. மேலும், அவர் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ரூ. 95 லட்சத்தைவிட அதிகம் செலவு செய்துள்ளார்.

இதையும் படிக்க:எந்த மாநிலத்தைவிட நாங்கள் பின்தங்கியிருக்கிறோம்?: முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

இதன்மூலம், மத்திய சென்னை தொகுதியில் நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என்பதால், தேர்தல் செல்லாது என்று அறிவித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், ``தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்தக் காரணங்களும் இல்லை’’ எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தார். இதன் மூலம் தயாநிதி மாறனின் வெற்றி செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடு திரும்பினார் தயாளு அம்மாள்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து இன்று (மார்ச் 9) மாலை வீடு திரும்பினார்.92 வயதான அவர், மூச்சத் திணறல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா பதில்

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்ச... மேலும் பார்க்க

சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை : சென்னையில் இன்று(மார்ச் 9) கடற்கரை, எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கட... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே திடீரென தீப்பிடித்த ஆம்னி வேன்!

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் ஆத்தூரி... மேலும் பார்க்க

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலா... மேலும் பார்க்க

சென்னையில் நாளை மழை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

வரும் மார்ச் 11 ஆம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.வரும் மார்ச் 11 ஆம் தேதி... மேலும் பார்க்க