செய்திகள் :

திமுக கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்து தாக்கிய கும்பல்; திருச்சியில் சாலை மறியல்! - நடந்தது என்ன?

post image

திருச்சி மாநகராட்சி 64-வது வார்டு கவுன்சிலராக, தி.மு.க-வைச் சேர்ந்த மலர்விழி என்பவர் உள்ளார். கழிவுநீர் சாக்கடை அமைப்பது தொடர்பாக வேல்முருகன் என்ற ஒப்பந்ததாரருக்கும், கவுன்சிலர் மலர்விழிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் வேல்முருகனிடம் வேலை பார்த்த ஒருவரை, கவுன்சிலர் மலர்விழியின் மகனும், தி.மு.க வட்ட கழகச் செயலாளருமான ஆனந்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

malarvizhi

இது குறித்து, காவல் நிலையாயதஹில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் தரப்பைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கே.கே.நகர் எல்.ஐ.சி காலனியில் உள்ள தி.மு.க கவுன்சிலர் மலர்விழியின் வீட்டுக்குள் புகுந்து, அவரையும், அவரது கர்ப்பிணி மருமகள் உள்ளிட்டோரையும் உருட்டுக்கட்டைகளால் தாக்கியதாக தெரிகிறது.

அதோடு, தி.மு.க கவுன்சிலரின் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியயதோடு, வீட்டு வாசலில் இருந்த காரையும் சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த தாக்குதலில், காயமடைந்த கவுன்சிலர் மலர்விழி உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனால், தாக்குதலுக்குள்ளான தி.மு.க கவுன்சிலர் மலர்விழியின் உறவினர்கள் கே.சாத்தனூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

car attack

'ஆளுங்கட்சி கவுன்சிலருக்கே பாதுகாப்பில்லை' என்று கவுன்சிலர் மலர்விழி கண்ணீர்மல்க தெரிவித்தார். இந்நிலையில், ஒப்பந்தம் சம்பந்தமாக இருதரப்புக்கும் கமிஷன் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. தி.மு.க கவுன்சிலர் ஒருவரது வீட்டுக்குள் புகுந்து ஒப்பந்ததாரர் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

'15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு

'2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள். இதை கோயில் நி... மேலும் பார்க்க

சென்னை: `போலீஸ்னு எனத் தெரியாம தப்பு பண்ணிட்டோம்’ - காவலர் கொடுத்த புகாரில் இளைஞர்கள் கைது

சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவர் கடந்த 16.07.2025-ம் தேதி இரவு, அண்ணாநகர் கிழக்கு, 1வது அவென்யூ பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

சென்னை: கழிவறைக்குச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைதான பின்னணி

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதாகும் பெண் ஒருவர், சென்னை, மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கார்டனில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார். இவரின் கணவர் அந்தக் கார்டனில் வேலை செய்து வருகிறார். சம்... மேலும் பார்க்க

`வாரிசில்லாத தம்பதி நிலம்; போலி ஆவணம் மூலம் கிரையம்?' - முன்னாள் பாஜக நிர்வாகி மீது வழக்கு

கரூர் மாவட்டம், நெடுங்கூர் என்.பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு குழந்தையில்லை. இந்நிலையில், தங்கவேலுக்கும், பா.ஜ.க கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் ச... மேலும் பார்க்க

நாமக்கல்: பல ஆண்டுகளாக நடைபெறும் கிட்னி விற்பனை; தலைமறைவாக உள்ள புரோக்கருக்கு வலை

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையத்தில் தொழிலாளிகளைப் குறிவைத்து கிட்னி விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளிப்பாளையம், குமாரபாளைய... மேலும் பார்க்க

சிசிடிவி கேமரா முன்பே ரூ.1.5 லட்சம் லஞ்சம் - சிக்கிய கோவை இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி!

கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் பராமரிப்பில் ஒரு கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு ரூ.40 லட்சம் ஆண்டு வருமானமாக வருகிறது. ஆனால், கோயிலில் முறையான நிர்வாகம் இல்லை என்று புகா... மேலும் பார்க்க