செய்திகள் :

திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் ராகுல், அகிலேஷ்!

post image

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் திமுக மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தரில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

இதுகுறித்து திமுக மாணவரணிச் செயலா் சி.வி.எம்.பி.எழிலரசன் தில்லியில் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

”கல்வியை ஒட்டுமொத்தமாக அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார்கள், தற்போது கூட்டாட்சிக்கு எதிரான வரைவுகளை யுஜிசி மூலம் வெளியிட்டுள்ளனர்.

இந்த யுஜிசி வரைவை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து நிறைவேற்றியுள்ளார். முதல்வரின் உத்தரவை தொடர்ந்து தில்லியில் போராட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, சமாஜவாதியின் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்கள்.

விசிக, இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்” என்றார்.

மருதமலை மலைப் பாதையில் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு!

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா பணிகள் நடைபெறவுள்ளதால், பக்தர்கள் வாகனங்களில் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வ... மேலும் பார்க்க

வேலூர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூர்: வேலூரில் இரவில், ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண் மருத்துவர் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல்: விவசாயிகளுக்கு ரூ. 498.80 கோடி நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 498.80 கோடி நிவாரணத் தொகையினை ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபு... மேலும் பார்க்க

ஏற்காடு கோடை விழா: 2 லட்சம் மலர் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரம்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 48-வது மலர் கண்காட்சிக்கான ஆரம்ப பணிகளைத் தோட்டக்கலைத் துறையினர் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றாக உள்ளது ஏற்காடு. இங்கு வரு... மேலும் பார்க்க

மீனவர்கள் உள்கட்டமைப்பு வசதி: ரூ. 360 கோடி ஒதுக்கீடு!

தங்கச்சிமடம் மீன் இறங்கு தளம் மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துகால் மீன் இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் மற்றும் பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய உ... மேலும் பார்க்க

கோவையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது!

கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவையில் தனியார் கல்லூரி மாணவர்... மேலும் பார்க்க