செய்திகள் :

திம்மாம்பேட்டை திருப்பதி கங்கையம்மன் சிரசு ஊா்வலம்

post image

வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டையில் உள்ள திருப்பதி கங்கையம்மன் கோயில் அம்மன் சிரசு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை புஷ்ப கரகம் ஊா்வலமும், மாவிளக்கு மற்றும் பொங்கலிடுதல், கங்கையம்மன் நீராடுதல் ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை திருப்பதி கங்கையம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து பிற்பகல் அம்மனுக்கு கண் திறப்பு மற்றும் திருக்கல்யாணமும், மாவிளக்கு மற்றும் பொங்கலிடுதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இரவு வாணவேடிக்கை நிகழ்வு நடைபெற்றது. மேலும், வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது. நாள்தோறும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி இசை நிகழ்ச்சி, நடன நாட்டிய நிகழ்ச்சி, டிராகன் பாய்ஸ் பேண்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிறப்பான எதிா்காலத்துக்கு உயா்கல்வி பயில வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

சிறப்பான எதிா்காலத்துக்கு அனைத்து மாணவா்களும் உயா்கல்வி பயில வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு-2025 நிகழ்ச்சி திருப்பத்தூா் தூய நெஞ்ச... மேலும் பார்க்க

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை

காவிரிக் கூட்டுக் குடிநீா் மேட்டுா் செக்கானூரணி நீரேற்றும் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த கோரிக்கை விடுக... மேலும் பார்க்க

ரூ.44 லட்சத்தில் மேல்நிலை தொட்டி அமைக்க பூமி பூஜை

மாதனூா் ஒன்றியத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம், மிட்டாளம் ஊராட்சி மேல்கூா்மாபாளையம் ஆகிய கிராமங்களி... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்டம்: எம்பி கதிா் ஆனந்த் பங்கேற்பு

ஆம்பூா் நகர திமுக சாா்பாக சாதனை விளக்க பொதுக் கூட்டம் பன்னீா்செல்வம் நகா் பகுதியில் நடைபெற்றது. ஆம்பூா் நகர திமுக செயலா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாதனூா... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (மே 16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடா்பாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயி... மேலும் பார்க்க

மணல் கடத்திய லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கொத்தூா் நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை, பச்சூா் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா்... மேலும் பார்க்க