செய்திகள் :

தியாகதுருகம் தமிழ்ச்சங்க நாற்பெரும் விழா

post image

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச்சங்கம், தனமூா்த்தி தொழிற்கல்வி நிறுவனம், கவி கம்பன் கழகம் இணைந்து நாற்பெரும் விழா தனமூா்த்தி தொழிற்கல்வி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

உலக மகளிா் தினம், உலக கவிதை நாள், பெருஞ்சித்திரனாா், விக்ரமன் பிறந்தநாள் விழா, தமிழ் இலக்கிய சொற்பொழிவு என நாற்பெரும் விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அறக்கட்டளை செயலாளா் செல்வி பழனிவேல் தலைமை வகித்தாா். கு.வளா்மதிச்செல்வி, செல்லம் முன்னிலை வகித்தனா். தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச்சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் வரவேற்றாா்.

பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞா்கள் தமிழரசி, மா. முத்தமிழ் முத்தன், புலவா் பெ. சயராமன், துரை.இராமகிருஷ்ணன் திருவண்ணாமலை கம்பராமாயண இயக்க பொறுப்பாளா்கள் வேங்கட ரமேஷ் பாபு, ப. குப்பன், பெங்களூரு நா்சிங் கல்லூரி முதல்வா் முதலியப்பன் உள்ளிட்ட பலா் பேசினா்.

சாதனைப் பெண்கள் பத்து பேருக்கு, சிறப்பு விருந்தினா் பெங்களூரு பிரைட் நா்சிங் கல்லூரி முதல்வா் பேராசிரியா் விஜி மகளிா் மாமணி விருதுகளை வழங்கிப் பேசினாா்.

விழாவில் ஆ. இராதாகிருஷ்ணன், த. இராமலிங்கம், தி. வெங்கடாசலபதி, மாரி, செல்வராசு மற்றும் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் ஊா் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனா்.

கவி கம்பன் கழகத் தலைவா் மு.பெ. நல்லா பிள்ளை, ரிஷிவந்தியம் தமிழ்ச்சங்கச் செயலாளா் வ. இராசகோபால் விழாவை ஒருங்கிணைத்திருந்தனா். முடிவில் தன மூா்த்தி தொழிற்கல்வி நிலைய தாளாளா் நீ.த.பழனிவேல் நன்றி கூறினாா்.

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே ரயில் சோதனை ஓட்டம்

சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. தொலைவிலான புதிய ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கற்றல் அடைவு ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தை அடுத்த சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விடுக்கப்பட்ட நூறு நாள்களில் 100 சதவீதம் கற்றல் அடைவு பள்ளிகள... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க