செய்திகள் :

விருதுநகர்: 7 வயது சிறுமிக்குப் பாலியல் கொடுமை; பக்கத்து வீட்டுக்காரர் கைது; நடந்தது என்ன?

post image

விருதுநகர் அருகே 7 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நபரை விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.

அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் நாராயணன். இவரின் வீட்டுக்கு அருகே பள்ளி பயிலும் 7 வயது சிறுமி தனது தோழிகளுடன் விளையாடுவது வழக்கம்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இந்நிலையில் கிருஷ்ணன் நாராயணனின் உறவினர் பெண், தான் வாங்கிய முருங்கைக்காய்களை, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 7வயது சிறுமியிடம் கொடுத்து அதைக் கிருஷ்ணன் நாராயணனிடம் கொடுத்து வரும்படி அனுப்பி வைத்துள்ளார்.

அதன்படி சிறுமியும், அவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது வலுக்கட்டாயப்படுத்தி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதே போன்று, தொடர்ச்சியாகக் கிருஷ்ணன் நாராயணன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துள்ளார்.

இதனால் பயந்துபோன சிறுமி, அதன்பின்னர் தெருவில் அவரைக் கண்டாலே வீட்டுக்குள் ஓடிவந்து ஒளிந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதைப் பார்த்துச் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், அவரை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நடந்த கொடுமையைச் சொல்லி சிறுமி பயந்தவாறே அழுதுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

இதையடுத்து, பாலியல் அத்துமீறல் தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி கிருஷ்ணன் நாராயணனைக் கைது செய்தனர்" எனக் கூறினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க

`ரயில்வே போலீஸுக்கு வேலை செஞ்சவன், இன்னைக்கு `ஏ’ கேட்டகிரி ரௌடி’ - காட்பாடி அலெக்ஸின் க்ரைம் ஹிஸ்டரி

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி அலெக்ஸ். வழிப்பறிக் கொள்ளை, கொலை என 38 குற்ற வழக்குகளில் தொடர்புடைய அலெக்ஸ் `ஏ’ கேட்டகிரி ரௌடியாக வலம் வந்துகொண்டிருக்கிறான். கடந்த 12-10-2016 -லிருந்த... மேலும் பார்க்க

Mollywood: ``போதையில் தவறாக நடந்தார்..'' - நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோஷியஸ் புகார்

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ, வின்சி அலோஷியஸ், தீபக் பரம்போல், ஸ்ரீகாந்த் கண்டரகுலா ஆ... மேலும் பார்க்க