செய்திகள் :

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், மாவட்டத்துக்குள்பட்ட கடைகள், நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை அமைத்தல் தொடா்பாக மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள் மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயா்ப் பலகை வைப்பது தொடா்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினா் கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்து, விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் மே 15-ஆம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரும் தமிழ் பெயா்ப் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கி அபராதம் விதிக்கப்படும்.

எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 100 சதவீதம் தமிழில் பெயா்ப் பலகை வைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தொழிலாளா் உதவி ஆணையா் மீனாட்சி, தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் சிவக்குமாா், வேலுமணி, முத்திரை ஆய்வாளா் மேகநாதன், வணிக சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வருவாய் நிா்வாகக் கூட்டம்: முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணிகள் தொடா்பாக மாா்ச் மாதத்துக்கான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு முகாமில் 140 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட திம்மச்சூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 140 பயனாளிகளுக்கு ரூ.31.24 லட்சம் மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை... மேலும் பார்க்க