செய்திகள் :

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நுபுர் சர்மா!

post image

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பாஜகவின் முன்னாள் தலைவர் நுபுர் சர்மா புனித நீராடினார்.

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி மகா சிவரத்திரியான நாளை நிறைவடைகின்றது. திரிவேணி சங்கமத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகை, நடிகர்கள் வரை அனைவரும் புனித நீராடினர்.

இந்த நிலையில், பாஜகவின் முன்னாள் தலைவரான நுஹபர் சர்மா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

இஸ்லாத்தின் நிறுவனர் நபிகள் நாயகம் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நுபுர் சர்மாவின் கருத்துக்கள் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியாவின் பல பகுதிகளில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்றது. 2022ல் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக நுபுர் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

45 நாள்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதிலுமிருந்து இதுவரை 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடிச் சென்றதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஆந்திரத்துக்கு ஓராண்டில் 13% வளர்ச்சி: சந்திரபாபு நாயுடு

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் 2024 - 25 நிதியாண்டில் ஆந்திர மாநிலம் 13% வளர்ச்சி அடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் ஆ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்! -சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டிலிருந்து ஒரேயொரு பொதுத்தேர்வுக்குப் பதிலாக இனி 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வரைவு அறிக்கைக்கு சிபிஎஸ்இ... மேலும் பார்க்க

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாந... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நத... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆ... மேலும் பார்க்க