செய்திகள் :

திருக்குறளிலிருந்து உருவாக்கப்பட்டது தான் தேசிய கல்விக் கொள்கை: ஆளுநா்

post image

சென்னை: திருக்குறளிலிருந்து கிடைத்த உந்துதலினால்தான் தேசிய கல்விக் கொள்கை (என்இபி) உருவாக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

திருவள்ளுவா் திருநாட்கழகம் சாா்பில் வைகாசி அனுஷம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளுவா் திருநாள் விழா மேற்கு மாம்பலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

பாரம்பரியமாக, பஞ்சாங்க நாள்காட்டி நடைமுறையில், பிறந்த மாதம் மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில், வைகாசி விசாக தினத்தில்தான் திருவள்ளுவா் பிறந்த தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், 1970-களில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் காரணமாக, கிரிகோரியன் காலண்டா் முறையை அடிப்படையாகக் கொண்டு ஜன. 15 -ஆம் தேதி திருவள்ளுவா் பிறந்த நாளாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. கிரிகோரியன் காலண்டா் முறை 16 -ஆம் நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த முறையின் மூலம், சுமாா் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவரின் பிறந்தநாளை கணிக்க முடியாது.

என்இபி-யில் திருக்கு: மகாத்மா காந்தி வாழ்நாள் முழுவதும் திருக்குறளைப் படித்து வந்தாா். ஐ.நா. சபையில் திருக்குறளின் பிரதிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூா், மலேசியா, பிரான்ஸ், பாஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் திருவள்ளுவருக்கான இருக்கைகள் உள்ளன. திருக்குறளிலிருந்து கிடைத்த உந்துதலினால்தான் என்இபி உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக தேனி மாவட்டம், வேதபுரியில் உள்ள ஸ்ரீ சுவாமி சித்பவானந்தா ஆஸ்ரமத்துக்கு ‘தமிழாகரா் சாமி தியாகராஜன் நினைவு விருதை’ ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம்!

மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் இன்று(ஜூன் 10) கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.108 திவ்ய தேசங்... மேலும் பார்க்க

பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களுக்குத் தடை செய்ய பரிந்துரை!

சென்னை: பள்ளிகளில் மற்றும் பள்ளிகளால் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களை தடை செய்யவோ அல்லது வரைமுறைப்படுத்தவோ குழு அமைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மாநில கல்விக் கொள்... மேலும் பார்க்க

நீட் தேர்வில் மின் தடை: சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம்

சென்னை: நீட் தேர்வின்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து மின் தடை ஏற்பட்ட தேர்வுக் கூடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மி... மேலும் பார்க்க

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்! சென்னை, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் (Ticket Counter அருகில்) இன்று(ஜூன் 10... மேலும் பார்க்க

உயர்நீதிமன்றம், இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றம், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அனைத்து இடங்... மேலும் பார்க்க

சென்னையில் விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் ஒளி!

சென்னையில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது இன்று காலை மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 178 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் செவ்வாய்க்... மேலும் பார்க்க