செய்திகள் :

மணிப்பூரில் தொடரும் வன்முறை: 2 போலீஸார் காயம்!

post image

மணிப்புரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர் கனன் சிங் மற்றும் நால்வரை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் 2 காவலர் காயமடைந்தனர்.

அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர்களின் ஒருவரான கனன் சிங்கை இம்பால் விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இம்பால் பள்ளத்தாக்கின் பல மாவட்டங்களில் தடை உத்தரவுகளை மீறி போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இரவு இம்பால் கிழக்கு மாவட்டத்தின் குராய் லாம்லாம் பகுதியில் மோதல்கள் வெடித்தன. கூட்டத்தைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் பல முறை கண்ணீர்ப் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர்.

மேலும் போராட்டக்காரர்கள் நான்கு சக்கர வாகனம் ஒன்றும் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தௌபல், காக்சிங் மாவட்டங்களிலும் சாலைத் தடுப்புகள் மற்றும் டயர்களை எரித்து போராட்டங்கள் நடைபெற்றன.

திங்கள்கிழமை மாலை இம்பால் மேற்கு மாவட்டத்தின் தேரா பகுதியிலும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பதற்றம் ஏற்பட்டது.

விஷ்ணுபூர் மாவட்டத்தின் நம்போலில், போராட்டக்காரர்களுடனான மோதலின்போது குறைந்தது இரண்டு காவல்துறையினருக்கு காயங்கள் ஏற்பட்டன.

பதற்றத்திற்கு மத்தியில், இன்று காலை இம்பாலில் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வருகின்றனர்.

மணிப்பூரில் 2023, மே மாதம் மைதேயி-குகி சமூகங்களிடையே மோதல் நீடித்து வருகிறது. இதில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறை தொடங்கியபோது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி கனன் சிங்கை சிபிஐ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.புது தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க

கர்நாடக முதல்வருக்கு எதிரான மாற்று நில முறைகேடு வழக்கு: ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்

புது தில்லி: கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்பான மாற்று நில முறைகேடு வழக்கில், ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.வீட்டுவசதி கூட்டுறவு சங்கம், மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆ... மேலும் பார்க்க

அண்டை நாட்டவரின் சட்டவிரோத குடியேற்றத்துக்கு மம்தா அரசு உதவி: மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு

கொல்கத்தா: அண்டை நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் நபா்கள் மேற்கு வங்கத்தில் குடியேற முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு உதவி வருகிறது என்று மத்திய அமைச்சா... மேலும் பார்க்க

தற்பெருமை அதிகம், சாதனைகள் குறைவு: அமித் ஷா மீது காங்கிரஸ் விமா்சனம்

புது தில்லி: இந்தியாவில் இதுவரை அமித் ஷாவை போல வேறெந்த எந்தவொரு மத்திய உள்துறை அமைச்சரின் பதவிக் காலத்திலும் தற்பெருமை பேச்சு அதிகமாகவும், சாதனைகள் குறைவாகவும் இருந்ததில்லை என்று காங்கிரஸ் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

மக்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது: மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: நாட்டு மக்களையும், தேசத்தையும் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மாநில பேரவையில் பேசுகையில் குற்றஞ்சாட்டினாா்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

11 ஆண்டுகால மோடி ஆட்சி: ‘நமோ’ செயலி கருத்துப் பகிா்வில் தமிழகம் மூன்றாவது இடம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அது தொடா்பாக ‘நமோ’ செயலி மூலம் மக்களின் கருத்துகள் பெறப்பட்டதில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது.ம... மேலும் பார்க்க