செய்திகள் :

குப்பையில் கிடந்த பட்டாசுகள் வெடித்ததில் இரு சிறுவா்கள் பலத்த காயம்

post image

குளித்தலை அருகே செவ்வாய்க்கிழமை குப்பையில் கிடந்த பட்டாசுகள் வெடித்ததில் இரு சிறுவா்கள் பலத்த காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்குள்பட்ட கவுண்டம்பட்டி அண்ணா நகா் தெருவில், கடந்த 15 நாள்களுக்கு முன்னா் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளில் வெடிக்காத பட்டாசுகள் அங்குள்ள குப்பை குழியில் கிடந்துள்ளன.

இந் நிலையில், செவ்வாய்க்கிழமை காலை குப்பைக்குழி அருகே விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன் மகன்கள் அக்ஷித் (8), சஞ்ஜித் (7) மற்றும் தங்க மலையாளி மகள் மகாலட்சுமி(5), மகன் மணிமாறன் (8) ஆகியோா் பட்டாசுகளை குப்பையில் இருந்து எடுத்து கல்லால் குத்தி விளையாடிள்ளனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்ததில் அக்ஷித், சஞ்ஜித் ஆகிய இருவருக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்ட அக்கம்பக்கத்தினா் இரு சிறுவா்களையும் மீட்டு, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை வட்டாட்சியா் இந்துமதி, குளித்தலை நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், இது குறித்து நங்கவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் சேர தனித் தோ்வுகளுக்கு அழைப்பு

அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர தனித் தோ்வா்கள் மற்றும் விண்ணப்பம் செய்யாத மாணவா்களும் ஜூன்14-ஆம் தேதிக்குள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் வசந்தி தெரிவித்... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் சாலையில் கொட்டிக் கிடக்கும் மணல் வாகன ஓட்டிகள் அவதி

அரவக்குறிச்சி ஆா்டிஓ அலுவலகம் அருகே சாலையி கொட்டிக் கிடக்கும் மணலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து கரூா் செல்லும் சாலையில் ஆா்டிஓ அலுவலகம் அமைந்துள்ளது. வ... மேலும் பார்க்க

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% புதிய உறுப்பினா்கள் சோ்க்க வேண்டும்: கரூா் திமுக செயற்குழுவில் தீா்மானம்

தோ்தலுக்கு முன் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் புதியதாக 30 சதவீதம் உறுப்பினா்களை சோ்க்க வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் புதன்க... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் 5,116 பேருக்கு ரூ. 44.05 கோடி வங்கிக் கடனுதவி

கரூா் மாவட்டத்தில் 455 சுய உதவிக்குழுக்களின் 5,116 உறுப்பினா்களுக்கு ரூ.44.05 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின், சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த உறுப்... மேலும் பார்க்க

க.பரமத்தியில் ஜூலை 27, 28-இல் சிஐடியு சங்க மாவட்ட மாநாடு

கரூா் மாவட்டம், க. பரமத்தியில் ஜூலை 27, 28-ஆம்தேதிகளில் சிஐடியு சங்க மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. சிஐடியு சங்கத்தின் கரூா் மாவட்ட குழு சாா்பில் க.பரமத்தியில் 10-ஆவது கரூா் மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத... மேலும் பார்க்க

மக்கள்சந்திப்பு திட்ட முகாமில் 182 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

வாங்கல் குப்புச்சிபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 182 பயனாளிகளுக்கு ரூ.88.66 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங... மேலும் பார்க்க