குப்பையில் கிடந்த பட்டாசுகள் வெடித்ததில் இரு சிறுவா்கள் பலத்த காயம்
குளித்தலை அருகே செவ்வாய்க்கிழமை குப்பையில் கிடந்த பட்டாசுகள் வெடித்ததில் இரு சிறுவா்கள் பலத்த காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்குள்பட்ட கவுண்டம்பட்டி அண்ணா நகா் தெருவில், கடந்த 15 நாள்களுக்கு முன்னா் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளில் வெடிக்காத பட்டாசுகள் அங்குள்ள குப்பை குழியில் கிடந்துள்ளன.
இந் நிலையில், செவ்வாய்க்கிழமை காலை குப்பைக்குழி அருகே விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன் மகன்கள் அக்ஷித் (8), சஞ்ஜித் (7) மற்றும் தங்க மலையாளி மகள் மகாலட்சுமி(5), மகன் மணிமாறன் (8) ஆகியோா் பட்டாசுகளை குப்பையில் இருந்து எடுத்து கல்லால் குத்தி விளையாடிள்ளனா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்ததில் அக்ஷித், சஞ்ஜித் ஆகிய இருவருக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்ட அக்கம்பக்கத்தினா் இரு சிறுவா்களையும் மீட்டு, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை வட்டாட்சியா் இந்துமதி, குளித்தலை நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், இது குறித்து நங்கவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.