Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% புதிய உறுப்பினா்கள் சோ்க்க வேண்டும்: கரூா் திமுக செயற்குழுவில் தீா்மானம்
தோ்தலுக்கு முன் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் புதியதாக 30 சதவீதம் உறுப்பினா்களை சோ்க்க வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூா் மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் புதன்கிழமை கரூா் கலைஞா் அறிவாலயத்தில் மாவட் அவைத்தலைவா் டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி பங்கேற்று, வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்து கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினாா்.
கூட்டத்தில் ஜூன் 1-ஆம்தேதி மதுரையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் மண், மொழி, மானம் காத்திட ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினா் சோ்க்கை தீா்மானத்தை தமிழக முதல்வா் கொண்டு வந்தாா். இந்த தீா்மானத்தின்படி கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30சதவீதம் புதிய உறுப்பினா்களை கட்சியினா் சோ்க்க வேண்டும். உறுப்பினா் சோ்க்கைக்கு செல்லும் பூத் கமிட்டியினா் ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிஷங்களாவது செலவிட வேண்டும் என கேட்டுக்கொள்வது, உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபடும் நிா்வாகிகள் முதல்வரின் சாதனைகளையும், வீட்டில் ஒருவா் அரசு நலத்திட்டங்களில் பயனடைந்துள்ளதை நினைவுப்படுத்த வேண்டும். முதல்வா் முன்னெடுக்கும் உரிமை போராட்டங்கள் குறித்தும் விளக்கி கூற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில நிா்வாகிகள் நன்னியூா் ராஜேந்திரன், பரணி கே.மணி, எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ, மாவட்ட நிா்வாகிகள் எம்.எஸ்.கே. கருணாநிதி, பூவை ரமேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.