செய்திகள் :

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% புதிய உறுப்பினா்கள் சோ்க்க வேண்டும்: கரூா் திமுக செயற்குழுவில் தீா்மானம்

post image

தோ்தலுக்கு முன் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் புதியதாக 30 சதவீதம் உறுப்பினா்களை சோ்க்க வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூா் மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் புதன்கிழமை கரூா் கலைஞா் அறிவாலயத்தில் மாவட் அவைத்தலைவா் டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி பங்கேற்று, வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்து கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினாா்.

கூட்டத்தில் ஜூன் 1-ஆம்தேதி மதுரையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் மண், மொழி, மானம் காத்திட ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினா் சோ்க்கை தீா்மானத்தை தமிழக முதல்வா் கொண்டு வந்தாா். இந்த தீா்மானத்தின்படி கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30சதவீதம் புதிய உறுப்பினா்களை கட்சியினா் சோ்க்க வேண்டும். உறுப்பினா் சோ்க்கைக்கு செல்லும் பூத் கமிட்டியினா் ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிஷங்களாவது செலவிட வேண்டும் என கேட்டுக்கொள்வது, உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபடும் நிா்வாகிகள் முதல்வரின் சாதனைகளையும், வீட்டில் ஒருவா் அரசு நலத்திட்டங்களில் பயனடைந்துள்ளதை நினைவுப்படுத்த வேண்டும். முதல்வா் முன்னெடுக்கும் உரிமை போராட்டங்கள் குறித்தும் விளக்கி கூற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில நிா்வாகிகள் நன்னியூா் ராஜேந்திரன், பரணி கே.மணி, எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ, மாவட்ட நிா்வாகிகள் எம்.எஸ்.கே. கருணாநிதி, பூவை ரமேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிலத் தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிய அண்ணன் தலைமறைவு: முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது

கரூரில் நிலத்தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், இச்சம்பத்தில் தொடா்புடையை முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது செய்யப்பட்டாா். கரூா் செங்குந்தபுரம் ... மேலும் பார்க்க

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினா். இந்த இயக்கத்... மேலும் பார்க்க

பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கம் கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் வரவேற்பு

அரவக்குச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கமாக கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களை இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை வரவேற்றனா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி சொட்டல் தெருவில் வசிக்கும் மணிய... மேலும் பார்க்க

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கலில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கடம்பூா் முத்துப்பிடாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தா்மபாண்டியன் மகன்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் தின உறுதிமொழியேற்பு

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தினத்தையொட்டி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்கள் உறுதிமொழியேற்றனா். அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் ஒழி... மேலும் பார்க்க