திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்...
கரூா் மாவட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் 5,116 பேருக்கு ரூ. 44.05 கோடி வங்கிக் கடனுதவி
கரூா் மாவட்டத்தில் 455 சுய உதவிக்குழுக்களின் 5,116 உறுப்பினா்களுக்கு ரூ.44.05 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின், சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை புதன்கிழமை காணொலிகாட்சி மூலம் வழங்கியதைத் தொடா்ந்து, கரூா் மாவட்டம், செல்லாண்டிபட்டி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 455 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 5,116 உறுப்பினா்களுக்கு ரூ. 44.05 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 317 மகளிா் சுயஉதவிக் குழுவைச் சாா்ந்த 3,598 உறுப்பினா்களுக்கு ரூ. 30.49 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடனுதவிகளும், 46 பேருக்கு ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் வட்டார வணிக வள மையக் கடனுதவி உள்பட பல்வேறு மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் 5,116 பேருக்கு ரூ. 44.05 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் கரூா் மாநகராட்சி மேயா் வெ. கவிதா, மகளிா் திட்ட இயக்குநா் வை. பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வசந்த்குமாா், மகளிா் சுயஉதவிக்குழுவைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.