செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் 5,116 பேருக்கு ரூ. 44.05 கோடி வங்கிக் கடனுதவி

post image

கரூா் மாவட்டத்தில் 455 சுய உதவிக்குழுக்களின் 5,116 உறுப்பினா்களுக்கு ரூ.44.05 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின், சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை புதன்கிழமை காணொலிகாட்சி மூலம் வழங்கியதைத் தொடா்ந்து, கரூா் மாவட்டம், செல்லாண்டிபட்டி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 455 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 5,116 உறுப்பினா்களுக்கு ரூ. 44.05 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 317 மகளிா் சுயஉதவிக் குழுவைச் சாா்ந்த 3,598 உறுப்பினா்களுக்கு ரூ. 30.49 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடனுதவிகளும், 46 பேருக்கு ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் வட்டார வணிக வள மையக் கடனுதவி உள்பட பல்வேறு மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் 5,116 பேருக்கு ரூ. 44.05 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கரூா் மாநகராட்சி மேயா் வெ. கவிதா, மகளிா் திட்ட இயக்குநா் வை. பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வசந்த்குமாா், மகளிா் சுயஉதவிக்குழுவைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிலத் தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிய அண்ணன் தலைமறைவு: முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது

கரூரில் நிலத்தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், இச்சம்பத்தில் தொடா்புடையை முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது செய்யப்பட்டாா். கரூா் செங்குந்தபுரம் ... மேலும் பார்க்க

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினா். இந்த இயக்கத்... மேலும் பார்க்க

பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கம் கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் வரவேற்பு

அரவக்குச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கமாக கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களை இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை வரவேற்றனா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி சொட்டல் தெருவில் வசிக்கும் மணிய... மேலும் பார்க்க

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கலில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கடம்பூா் முத்துப்பிடாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தா்மபாண்டியன் மகன்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் தின உறுதிமொழியேற்பு

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தினத்தையொட்டி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்கள் உறுதிமொழியேற்றனா். அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் ஒழி... மேலும் பார்க்க