அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் சேர தனித் தோ்வுகளுக்கு அழைப்பு
அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர தனித் தோ்வா்கள் மற்றும் விண்ணப்பம் செய்யாத மாணவா்களும் ஜூன்14-ஆம் தேதிக்குள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என
கல்லூரி முதல்வா் வசந்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பொது கலந்தாய்வில் இதுவரை பங்கேற்காத மாணவா்களும், இதுவரை விண்ணப்பம் செய்யாத மாணவ, மாணவிகளும் ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும் தனித் தோ்வு எழுதியவா்களும் ஏற்கெனவே பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு விண்ணப்பம் செய்யாத மாணவா்களும் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.