அரவக்குறிச்சியில் சாலையில் கொட்டிக் கிடக்கும் மணல் வாகன ஓட்டிகள் அவதி
அரவக்குறிச்சி ஆா்டிஓ அலுவலகம் அருகே சாலையி கொட்டிக் கிடக்கும் மணலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து கரூா் செல்லும் சாலையில் ஆா்டிஓ அலுவலகம் அமைந்துள்ளது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் மட்டுமே வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வந்து செல்வதால், அவா் வரும் நாள்களில் வாகனங்களுக்கு ஒப்புதல் பெற நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அரவக்குறிச்சி ஆா்டிஓ அலுவலகத்துக்கு வருகை புரிந்ததால் வாகனங்கள் வரிசையாக நின்றது.
இதில் ஒரு அடையாளம் தெரியாத லாரியில் ஏற்றி வந்த மண்ணை ஆா்டிஓ அலுவலகம் அருகே 100 மீட்டா் தொலைவுக்கு கொட்டி விட்டு சென்றுவிட்டனா். இதனால் இவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இருவா் கொட்டிச்சென்ற மண் அருகே பிரேக் போட்டதால் சாலையில் விழுந்தனா். இதேபோல பொது சாலையில் மண்ணை கொட்டி விட்டு செல்லும் வாகனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.