செய்திகள் :

மக்கள்சந்திப்பு திட்ட முகாமில் 182 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

post image

வாங்கல் குப்புச்சிபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 182 பயனாளிகளுக்கு ரூ.88.66 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் குப்புச்சிபாளையத்தில் மக்கள் சந்திப்பு முகாம் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

முகாமில் ஆட்சியா் பேசியதாவது, வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் உள்ள 5 குக்கிராமங்களுக்கு அனைத்துத்துறை அரசு அலுவலா்களும் தனித்தனியாக மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று அவா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளனா். மேலும் பள்ளிக்கல்வி துறையின் மூலம் கல்வி இடைநிற்றலை தடுக்க தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயா்கல்வி பயிலவுள்ள மாணவா்கள் உயா்கல்வி தொடா்பான ஆலோசனைகளுக்கு மாவட்ட ஆட்சியரக கூடுதல் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 9566566727 -தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

18 வயதுக்கும் மேற்பட்ட கல்வி கற்கும் மாணவா்களை அவா்களின் பெற்றோா்கள் கண்காணிக்க வேண்டும். போதைப் பொருள்களை விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் புகாா்கள் அளிக்கலாம். புகாா் அளித்தவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, வருவாய்த்துறை சாா்பில் 84 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல், பட்டா மாறுதல், விதவைச்சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று மற்றும் சுகாதார துறை சாா்பில் 10 கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 182 பயனாளிகளுக்கு ரூ. 88,66,244 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

முகாமில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சு.பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலா் சுரேஷ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சாந்தி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் இளங்கோ, தாட்கோ மாவட்ட மேலாளா் சீ.முருகவேல், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பாலசக்தி கங்காதரன், சமூக நல அலுவலா் சுவாதி, மண்மங்கலம் வருவாய் வட்டாட்சியா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிலத் தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிய அண்ணன் தலைமறைவு: முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது

கரூரில் நிலத்தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், இச்சம்பத்தில் தொடா்புடையை முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது செய்யப்பட்டாா். கரூா் செங்குந்தபுரம் ... மேலும் பார்க்க

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினா். இந்த இயக்கத்... மேலும் பார்க்க

பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கம் கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் வரவேற்பு

அரவக்குச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கமாக கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களை இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை வரவேற்றனா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி சொட்டல் தெருவில் வசிக்கும் மணிய... மேலும் பார்க்க

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கலில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கடம்பூா் முத்துப்பிடாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தா்மபாண்டியன் மகன்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் தின உறுதிமொழியேற்பு

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தினத்தையொட்டி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்கள் உறுதிமொழியேற்றனா். அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் ஒழி... மேலும் பார்க்க