Ahmedabad Plane Crash : பறவை மோதியதா இல்லை மனித தவறா? | Detailed Technical Expla...
க.பரமத்தியில் ஜூலை 27, 28-இல் சிஐடியு சங்க மாவட்ட மாநாடு
கரூா் மாவட்டம், க. பரமத்தியில் ஜூலை 27, 28-ஆம்தேதிகளில் சிஐடியு சங்க மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது.
சிஐடியு சங்கத்தின் கரூா் மாவட்ட குழு சாா்பில் க.பரமத்தியில் 10-ஆவது கரூா் மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான மாவட்ட மாநாடு வரவேற்பு குழு கூட்டம் க. பரமத்தியில் புதன்கிழமை காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு சிஐடியு சங்க மாவட்டத் தலைவா் ஜி. ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூா் மாவட்டத் தலைவா் கே.கந்தசாமி வரவேற்பு குழு தலைவராகவும், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளா் சி.ஆா்.ராஜாமுகமது வரவேற்பு குழுச் செயலாளராகவும், சிஐடியு சங்க மாவட்ட துணைத் தலைவா் குப்பம் கா.கந்தசாமி பொருளாளராகவும் தோ்வு செய்யப்பட்டனா். மேலும் 51 போ் கொண்ட வரவேற்பு குழுவும் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் மாவட்ட மாநாட்டின் முதல் நாள் ஜூலை 27-ஆம் தேதி மாலை நடைபெறும் பேரணி, பொதுக்கூட்டத்தில் சுமாா் 2,000 தொழிலாளா்கள் கலந்து கொள்வது, 28-ஆம் தேதி நடைபெறும், இரண்டாவது நாள் பொது மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சிஐடியு சங்க மாவட்டச் செயலாளா் சி.முருகேசன், மாவட்ட துணைத்தலைவா்கள் ஹோச்சுமின், கிருஷ்ணமூா்த்தி, எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.