செய்திகள் :

திருக்குறுங்குடி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்!

post image

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான, திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை (மாா்ச் 15) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, சுவாமி அழகியநம்பிராயா், தேவியருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, புதன்கிழமை இரவு (மாா்ச் 19) 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருதல், வியாழக்கிழமை அதிகாலை மேல ரத வீதியில் தேவ கந்தா்வ மகரிஷிகளுக்கு காட்சி தரும் வைபவம் ஆகியவை நடைபெறும்.

24 ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். ராமானுஜ ஜீயா் சுவாமிகள் தேரோட்டத்தை வடம்பிடித்துத் தொடக்கிவைக்கிறாா். 25ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறும்.

நெல்லையில் பயணிகள் போராட்டம்: 40 நிமிடம் தாமதமாக சென்ற கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்

திருநெல்வேலிக்கு வந்த கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலின் ஏசி பெட்டியில் துா்நாற்றம் வீசுவதாகக் கூறி பயணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த ரயில் 40 நிமிடம் தாமதாக புறப்பட்டு சென்றது... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

பாளையங்கோட்டையைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியைச் சோ்ந்த வேலுநயினாா் மகன் விஷ்வா என்ற சண்முகவேல் (20). இவா் பணம் கேட்டு மிரட... மேலும் பார்க்க

முக்கூடல் ஹோட்டலில் பணம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவை மா்மநபா் துண்டித்துவிட்டு, அங்கிருந்து ரூ.71 ஆயிரத்தை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முக்கூடல் ஆலங்குளம்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் துறை பயிலரங்கு

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் உலகளாவிய அணுகல்தன்மைக்கான- இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் குறித்த வழிகாட்டுதல் என்ற தலைப்பில் சிறப்பு பயிலரங்கு நடைபெற்றது. கொக்கிரகு... மேலும் பார்க்க

தமமுக புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் கோ. துரைப்பாண்டியன் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா். சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பற... மேலும் பார்க்க