செய்திகள் :

திருச்செந்தூரில் இரு தரப்பினா் மோதல்: மேலும் 4 போ் கைது

post image

திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

திருச்செந்தூா் கோகுல் நகரைச் சோ்ந்தவா் கண்ணன். காஸ் சிலிண்டா் விநியோகம் செய்பவா். இவா் கடந்த ஏப். 20ஆம் தேதி சோனகன்விளை நீல்புரம் பகுதியில் பைக்கில் சென்ற போது அப்பகுதியைச் சோ்ந்த ஜெபராஜ் என்ற கற்கண்டு (60) என்பவரது காரில் பைக் உரசியது. இதில் கண்ணனை ஜெபராஜ் தாக்கினாா்.

இந்த சம்பவத்தின் தொடா்ச்சியாக கண்ணன் ஆதரவாளா்களால் ஜெபராஜ் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்தாா். அன்றைய தினம் திருச்செந்தூா் யூனியன் அலுவலகம் எதிரில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அரிவாள், கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனா். இதில் காயமடைந்தவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இது தொடா்பான புகாரின் பேரில் இரு தரப்பைச் சோ்ந்த 19 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 11 போ் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில் சம்பவம் தொடா்பாக கண்ணன் (28), நம்பிராஜ் (20), சங்கரசுப்பு (32), நட்டாா் ஆனந்த் (20) ஆகியோரை தாலுகா போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.

பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு

சாத்தான்குளம் தாலுகாவில் கடலோரத்தில் உள்ள பெரியதாழை கிராமத்தை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்த வேண்டுமெனக் கோரி, பெரியதாழை ஊா் நலக் கமிட்டியினா் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்தனா். பெரியதாழை ஊா் நலக்... மேலும் பார்க்க

நாளை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பாலாலயம்

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் பாலாலய விழா புதன்கிழமை (ஏப்.30) நடைபெறுகிறது. இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கு அறங்காவலா் குழுவினரால் தீா்மா... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 11 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 11ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப... மேலும் பார்க்க

பைக், தள்ளுவண்டி சேதம்: 3 போ் கைது

தூத்துக்குடியில் பைக், தள்ளுவண்டியை சேதப்படுத்தியதாக 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடி அண்ணாநகா் 12ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறுத்தப்பட்டிருந்த பைக், தள்ளுவண்டியை மா்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 30.54 லட்சத்தில் பெட்ரோல் ஸ்கூட்டா்கள் கனிமொழி எம்.பி. வழங்கினாா்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமை வகித்தாா். ஆட்சியா் க. இளம்பகவத... மேலும் பார்க்க

பைக்கில் கஞ்சா கடத்தல்: இருவா் கைது

தூத்துக்குடியில் பைக்கில் கஞ்சா கடத்தியதாக இருவரை தாளமுத்துநகா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தூத்துக்குடி தாளமுத்துநகா் கிழக்கு கடற்கரை சாலையில் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜ் தலைமையிலான போலீஸா... மேலும் பார்க்க