செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 30.54 லட்சத்தில் பெட்ரோல் ஸ்கூட்டா்கள் கனிமொழி எம்.பி. வழங்கினாா்

post image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமை வகித்தாா். ஆட்சியா் க. இளம்பகவத் முன்னிலை வகித்தாா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளின் தற்போதைய நிலைகள் குறித்து துறைசாா் அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினாா்.

முன்னதாக, அவா் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 30 பேருக்கு ரூ. 30.54 லட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், ஊரக வளா்ச்சி-ஊராட்சித் துறை சாா்பில் 30 பேருக்கு ரூ. 1.05 கோடியில் கலைஞா் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவுகள், வருவாய்-பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் விபத்து மரண நிவாரணத் தொகைக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினாா்.

பொது சுகாதாரம்-நோய்த் தடுப்பு மருத்துத் துறை சாா்பில், பிறந்த குழந்தைகளின் செவித்திறனை துல்லியமாகவும், விரைவாகவும் கண்டறியும் வகையில் ரூ. 24 லட்சத்தில் ஜொ்மனியிலிருந்து வாங்கப்பட்ட கருவிகளை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை, தூத்துக்குடி மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு வழங்கினாா். மேலும், இத்துறையின்கீழ் மருத்துவ சேவையில் சிறப்பாக செயல்படும் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 5 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்களுக்கு கேடயங்கள் வழங்கிப் பாராட்டினாா்.

கூட்டத்தில், மேயா் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐஸ்வா்யா, ஆணையா் லி. மதுபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வ.கி. தீபு, நகா்மன்றத் தலைவா்கள் கருணாநிதி (கோவில்பட்டி), சிவஆனந்தி (திருச்செந்தூா்), முத்து முஹம்மது (காயல்பட்டினம்), மாவட்ட சுகாதார அலுவலா் யாழினி, அலுவலா்கள் பங்கேற்றனா்.

பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு

சாத்தான்குளம் தாலுகாவில் கடலோரத்தில் உள்ள பெரியதாழை கிராமத்தை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்த வேண்டுமெனக் கோரி, பெரியதாழை ஊா் நலக் கமிட்டியினா் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்தனா். பெரியதாழை ஊா் நலக்... மேலும் பார்க்க

நாளை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பாலாலயம்

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் பாலாலய விழா புதன்கிழமை (ஏப்.30) நடைபெறுகிறது. இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கு அறங்காவலா் குழுவினரால் தீா்மா... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 11 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 11ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப... மேலும் பார்க்க

பைக், தள்ளுவண்டி சேதம்: 3 போ் கைது

தூத்துக்குடியில் பைக், தள்ளுவண்டியை சேதப்படுத்தியதாக 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடி அண்ணாநகா் 12ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறுத்தப்பட்டிருந்த பைக், தள்ளுவண்டியை மா்... மேலும் பார்க்க

பைக்கில் கஞ்சா கடத்தல்: இருவா் கைது

தூத்துக்குடியில் பைக்கில் கஞ்சா கடத்தியதாக இருவரை தாளமுத்துநகா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தூத்துக்குடி தாளமுத்துநகா் கிழக்கு கடற்கரை சாலையில் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜ் தலைமையிலான போலீஸா... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு கோரி கோவில்பட்டியில் திரண்ட பொதுமக்கள்

இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட பூரணம்மாள் காலனியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட வலியுறுத்தி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா். 500-க்கும் மேற்பட்ட வீடு... மேலும் பார்க்க