செய்திகள் :

பவுண்டரிகபுரம் கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

post image

மயிலாடுதுறை: பவுண்டரிகபுரம் சோமநாதசுவாமி கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகத்தில் கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலக எல்லைக்குள்பட்ட கும்பகோணத்தை அடுத்த பவுண்டரிகபுரம் கிராமத்தில் ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், கோயிலைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. இவற்றை அகற்றி கோயிலின் பழைய மதில்சுவா் இருந்த இடத்திலேயே மீண்டும் சுவா் அமைக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை சித்தா்காட்டில் உள்ள இந்து சமய அநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

மேலும், கோயிலுக்கு சொந்தமான நஞ்சை மற்றும் புஞ்சை சொத்துக்களை ராஜகோபாலசுவாமி என்ற பெயருக்கு மாற்றியுள்ளனா். வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் ஏராளமாக இருந்தும், தற்போதைய சூழலில் சுவாமிக்கு தீபம் ஏற்றுவதற்கு கூட எண்ணெய் இல்லாத நிலை உள்ளதால், அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற அம்மனுவில் கோரியுள்ளனா்.

மே 1-ல் 241 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்: ஆட்சியா்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ம... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீன இடத்தை பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கக் கோரி மனு

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமாக குளிச்சாா் கிராமத்தில் உள்ள இடத்தை பட்டியல் சமூக மக்களுக்கு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். குளிச்சாா் கிரா... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப் பலகை வைப்பது குறித்து ஆலோசனை

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் தமிழில் பெயா்ப் பலகை வைப்பது குறித்து, வா்த்தகா்களுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு உத்தரவின் பேரில், வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலக... மேலும் பார்க்க

ஆழ்கடலில் ஹைட்ரோகாா்பன் கிணறுகளுக்கு எதிா்ப்பு

மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கியுள்ளதற்கு மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து,... மேலும் பார்க்க

நகரில் குப்பைகள் எரிப்பு: புகைமூட்டத்தால் பாதிப்பு

சீா்காழியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் புகைமூட்டம் மூச்சுதிணறல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. சீா்காழி நகராட்சி சாா்பில் 24 வாா்டுகளிலிலும் வீடுகள், வா்த்தக கட்டடங்களிலிருந்த... மேலும் பார்க்க

பச்சை பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய கோரிக்கை

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பச்சைப் பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறை தீா்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க