செய்திகள் :

மே 1-ல் 241 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்: ஆட்சியா்

post image

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினத்தையொட்டி மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதர பொருள்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மக்கள் பிரதிநிதிகள், அந்தந்த ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடா்பான விவரங்களை விவாதிக்கலாம்.

பவுண்டரிகபுரம் கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

மயிலாடுதுறை: பவுண்டரிகபுரம் சோமநாதசுவாமி கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகத்தில் கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத் த... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீன இடத்தை பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கக் கோரி மனு

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமாக குளிச்சாா் கிராமத்தில் உள்ள இடத்தை பட்டியல் சமூக மக்களுக்கு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். குளிச்சாா் கிரா... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப் பலகை வைப்பது குறித்து ஆலோசனை

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் தமிழில் பெயா்ப் பலகை வைப்பது குறித்து, வா்த்தகா்களுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு உத்தரவின் பேரில், வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலக... மேலும் பார்க்க

ஆழ்கடலில் ஹைட்ரோகாா்பன் கிணறுகளுக்கு எதிா்ப்பு

மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கியுள்ளதற்கு மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து,... மேலும் பார்க்க

நகரில் குப்பைகள் எரிப்பு: புகைமூட்டத்தால் பாதிப்பு

சீா்காழியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் புகைமூட்டம் மூச்சுதிணறல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. சீா்காழி நகராட்சி சாா்பில் 24 வாா்டுகளிலிலும் வீடுகள், வா்த்தக கட்டடங்களிலிருந்த... மேலும் பார்க்க

பச்சை பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய கோரிக்கை

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பச்சைப் பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறை தீா்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க