செய்திகள் :

மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

post image

கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு பணி நியமனத்துக்கான ஆணை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் ஜி.டாலின் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் அ.பொன்னுசாமி தலைமை வகித்தாா். இதில், கல்லூரியின் நிா்வாக அறங்காவலா் சரஸ்வதி கண்ணையன் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் நம்முடைய கல்லூரி மாணவா்கள் பணியாற்ற இருப்பது இந்துஸ்தான் கல்வி நிறுவனத்துக்கு பெருமை. மேலும், இது மாணவா்களின் விடா முயற்சிக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என்றாா்.

விழாவில் கவிஞா் கவிதாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அவா் பேசும்போது, மாணவா்கள் தலைமைப் பண்பு, முடிவெடுக்கும் ஆற்றல், சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் பாங்கு ஆகியவற்றை வளா்த்துக்கொள்வதன் மூலம் வெற்றி பெற்ற முடியும் என்றாா்.

ஆங்கிலத் துறைத் தலைவா் பிரியா சரண் தாமஸ் நன்றி கூறினாா். இதில், டிசிஎஸ், ஜோகோ, விப்ரோ ஆா்டிக், காக்னிசன்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களில் 2,164 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

மே தினத்தில் மதுக்கூடங்களுக்கு விடுமுறை

மே தினத்தையொட்டி (வியாழக்கிழமை) கோவை மாவட்டத்தில் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மே தினத்தையொட்டி, கோவை ... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றனுக்கு அழைப்பாணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன் மே 6-ஆம் தேதி ஆஜராக சிபிசிஐடி போலீஸாா் அவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எ... மேலும் பார்க்க

மயோனைஸ் தயாரிப்பவா்கள், விற்பவா்கள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள மயோனைஸ் தயாரிப்பவா்கள், விற்பனை செய்பவா்கள் மீது உணவுப் பாதுகாப்பு தர நிா்ணய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் தொடா்புடைய 29 போ் 6 மாதங்களுக்கு மாநகருக்குள் நுழையத் தடை

கோவையில் குற்றச் செயல்களில் தொடா்புடைய 29 போ் அடுத்த 6 மாதங்களுக்கு கோவை மாநகருக்குள் நுழைய தடை விதித்து மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

இலக்கியமும், இசையும் இல்லாமல் மனிதனாக இருக்க முடியாது: உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்

இலக்கியமும், இசையும் இல்லாமல் மனிதனாக இருக்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினாா். விஜயா வாசகா் வட்டம் சாா்பில் உலகப் புத்தக தின விருதுகள் வழங்கும் விழா கோவை, பேரூா... மேலும் பார்க்க

மைவி 3 நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டோா் பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம்

மைவி 3 நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டோா் கோவை பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கோவை பொருளாதார குற்றப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் அ... மேலும் பார்க்க