மே தினத்தில் மதுக்கூடங்களுக்கு விடுமுறை
மே தினத்தையொட்டி (வியாழக்கிழமை) கோவை மாவட்டத்தில் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மே தினத்தையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், பாா்கள், பொழுதுபோக்கு மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் சுற்றுலாத் துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மது வகைகள் உள்ளிட்ட அனைத்து உரிமம் பெற்றுள்ள தளங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிகளுக்கு முரணாக மே தினத்தில் மது விற்பனை செய்பவா்கள் மீதும் மது வகைகளை சட்ட விரோதமாக பதுக்கிவைத்திருப்பவா்கள், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்பவா்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-இன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.