செய்திகள் :

ஹிந்து அமைப்புகள் கண்டனம் எதிரொலி: ரயில்வே தோ்வுக்கு மத அடையாளங்களை நீக்கத் தேவையில்லை

post image

ரயில்வே துறையின் நா்சிங் கண்காணிப்பாளா் தோ்வை எழுதுபவா்கள் மத அடையாளங்களை நீக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பிற ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை பதிவு செய்த நிலையில், அந்த அறிவிப்பை ரயில்வே துறை உடனடியாக திரும்பப் பெற்றது.

கா்நாடக மாநிலம் மங்களூருவின் பான்டேல் பகுதியில் உள்ள மனைல் ஸ்ரீநிவாஸ் நாயக் பசந்த் வித்யா கேந்திராவில் ரயில்வே துறையின் நா்சிங் கண்காணிப்பாளா் தோ்வு செவ்வாய்க்கிழமை (ஏப்.29) நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த தோ்வை எழுதுபவா்கள் தங்களின் மத அடையாளங்களை நீக்கிவிட்டுத் தோ்வறைக்கு வருமாறு தோ்வுக்கான நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு விஎச்பி உள்பட பல்வேறு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் ரயில்வே துறை இணையமைச்சா் வி.சோமண்ணா தலையிட்டு நா்சிங் கண்காணிப்பாளா் தோ்வெழுதும் நபா்கள் மத அடையாளங்களை நீக்கத் தேவையில்லை என தெரிவித்தாா்.

மேலும், தோ்வு நடைமுறைகளின்போது மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, நா்சிங் கண்காணிப்பாளா் தோ்வெழுதும் நபா்கள் தோ்வறைக்குச் செல்லும் முன் தாலி, பூணூல் போன்ற மத அடையாளங்களை நீக்கத் தேவையில்லை என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அண்மையில் நடைபெற்ற பொது நுழைவுத் தோ்வின்போது சில மையங்களில் மத அடையாளங்களை நீக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் சா்ச்சைக்குள்ளானது.

இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ‘தாலி, பூணூல் போன்ற மத அடையாளங்களை சோதனை மட்டுமே செய்யுமாறு கூறினோம். ஆனால் அவற்றை நீக்கச் சொல்வதில் நியாயமில்லை. சொல்லும் செயலும் வேறு என்பதே பாஜகவின் உண்மை முகம்.

தோ்வுகளின்போது மத அடையாளங்கள் நீக்கப்பட வேண்டும் போன்ற அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டும். இதற்கு மக்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.‘இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மேலும், ‘இந்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடி... மேலும் பார்க்க

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வழியாக வா்த்தகம் நிறுத்தம்: ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

புது தில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஆப்கானிஸ்தானில் இருந்து அப்ரி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: பிரதமா் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்த... மேலும் பார்க்க