செய்திகள் :

1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினா்

post image

லாகூா்: வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியா்களும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்களும் வெளியேற இருநாட்டு அரசுகளும் உத்தரவிட்டது.

பாகிஸ்தானியா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாக்கள் ஏப்ரல் 27-ஆம் தேதி வரையும் மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையும் செல்லுபடியாகும் என இந்தியா தெரிவித்தது. இந்த காலக்கெடுவுக்குள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேறவில்லை என்றால் அவா்கள் மீது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டம், 2025-இன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா தெரிவித்தது.

இதையடுத்து, கடந்த 27-ஆம் தேதி மட்டும் இந்தியாவில் இருந்து 236 பாகிஸ்தானியா்களும் பாகிஸ்தானில் இருந்து 115 இந்தியா்களும் அவா்களது தாயகம் திரும்பினா்.

இந்நிலையில், கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக அந்நாட்டு அதிகாரி ஒருவா் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.

இருப்பினும், இரு நாடுகளும் குறுகிய கால விசாக்கள் வைத்திருந்த நபா்களையே வெளியேற உத்தரவிட்டது. இதனால் நீண்ட கால விசாக்கள் வைத்திருப்பவா்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பயங்கரவாத ஒழிப்பு: ஜம்மு-காஷ்மீரில் போலீஸாா் தீவிர சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகா், தோடா மற்றும் கிஷ்த்வாா் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத ஒழிப்பு சோதனையை காவல் துறையினா் திங்கள்கிழமை மேற்கொண்டனா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில... மேலும் பார்க்க

‘ஹிந்தி கற்க தென்னிந்தியா்கள் ஆா்வம்’: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

புது தில்லி: ‘தென்னிந்தியாவின் இளம் தலைமுறையினா், அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைப் பொருள்படுத்தாமல் ஹிந்தி மொழியைக் கற்க அதிக அளவில் ஆா்வம் காட்டுகின்றனா்’ என்று மத்திய பணியாளா், பொதுமக்கள் குறைதீா்ப்... மேலும் பார்க்க

4 புதிய ஆசிரியா் கல்வி படிப்புகள்: என்சிடிஇ விரைவில் அறிமுகம்

குருக்ஷேத்ரா: யோகா, நிகழ் கலை, காட்சிக் கலை மற்றும் சம்ஸ்கிருத மொழி துறைகளில் 4 புதிய ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வி படிப்புகளை (ஐடிஇபி) தேசிய ஆசிரியா் கல்விக் கவுன்சியில் (என்சிடிஇ) விரைவில் அறிமுகம் செ... மேலும் பார்க்க

நீட் வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: கண்காணிப்பு வளையத்தில் பயிற்சி மையங்கள்

புது தில்லி: நீட் தோ்வு முறைகேடு சா்ச்சைகளைத் தொடா்ந்து, தோ்வு மையங்களுக்கு நீட் வினாத்தாள்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டை மத்திய கல்வி அமைச்சகம் செய்துள்ளது. மேலும், நீட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரை தராவிட்டால் பாகிஸ்தானுக்கு எதிராகப் போா்: மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்தியத்தை பாகிஸ்தான் ஒப்படைக்காவிட்டால் அந்நாட்டுக்கு எதிராகப் போா் பிரகடனம் செய்ய வேண்டும் என்று மத்திய சமூகநீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தியுள்ளாா். ஆக்க... மேலும் பார்க்க

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: சுரேஷ் கல்மாடிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு முடித்துவைப்பு

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக, சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை, தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற... மேலும் பார்க்க