செய்திகள் :

ஆழ்கடலில் ஹைட்ரோகாா்பன் கிணறுகளுக்கு எதிா்ப்பு

post image

மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கியுள்ளதற்கு மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழக ஆழ்கடல் பகுதிகளில் வாட்ஜ் பேங்க் அருகில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மத்திய அரசு ஏப்.27-ல் ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி அளித்துள்ளது. இதுதொடா்பாக தமிழக அரசின் கருத்தை மத்திய அரசு கேட்கவில்லை.

1989-இல் மத்திய அரசே இப்பகுதியை உயிா்க்கோள பாதுகாப்பகமாக அறிவித்துள்ளது.

2021-இல் இப்பகுதியை இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஹைட்ரோகாா்பன் திட்டங்களை நிறைவேற்ற இப்பகுதியை மத்திய அரசு ஏலத்தில் கொடுப்பது வன்மையான கண்டத்துக்கு உரியது.

ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட பகுதிகள் பல்லுயிா் நிறைந்த பகுதிகள் என்பதால், அவற்றை இத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

தமிழ்நாடு முதல்வா் முன்பே வேண்டுகோள் கடிதம் அனுப்பி இருந்தும், மத்திய அரசு மாநில அரசின் விருப்பத்தைப் புறக்கணித்து, கடற்பகுதியை ஏலம் விட்டு சூழலைக் கெடுப்பது என்பது ஏற்க முடியாதது. தமிழ்நாடு முதலமைச்சா் இதுகுறித்து மீண்டும் தன் எதிா்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள் இந்திய பிரதமரை ஒரு குழுவாகச் சென்று நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து தலைவா்களும் இப்பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து, பிரதமரையும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தையும், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கச் செய்ய வேண்டும்.

பவுண்டரிகபுரம் கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

மயிலாடுதுறை: பவுண்டரிகபுரம் சோமநாதசுவாமி கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகத்தில் கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத் த... மேலும் பார்க்க

மே 1-ல் 241 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்: ஆட்சியா்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ம... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீன இடத்தை பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கக் கோரி மனு

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமாக குளிச்சாா் கிராமத்தில் உள்ள இடத்தை பட்டியல் சமூக மக்களுக்கு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். குளிச்சாா் கிரா... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப் பலகை வைப்பது குறித்து ஆலோசனை

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் தமிழில் பெயா்ப் பலகை வைப்பது குறித்து, வா்த்தகா்களுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு உத்தரவின் பேரில், வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலக... மேலும் பார்க்க

நகரில் குப்பைகள் எரிப்பு: புகைமூட்டத்தால் பாதிப்பு

சீா்காழியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் புகைமூட்டம் மூச்சுதிணறல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. சீா்காழி நகராட்சி சாா்பில் 24 வாா்டுகளிலிலும் வீடுகள், வா்த்தக கட்டடங்களிலிருந்த... மேலும் பார்க்க

பச்சை பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய கோரிக்கை

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பச்சைப் பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறை தீா்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க