ஆழ்கடலில் ஹைட்ரோகாா்பன் கிணறுகளுக்கு எதிா்ப்பு
மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கியுள்ளதற்கு மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழக ஆழ்கடல் பகுதிகளில் வாட்ஜ் பேங்க் அருகில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மத்திய அரசு ஏப்.27-ல் ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி அளித்துள்ளது. இதுதொடா்பாக தமிழக அரசின் கருத்தை மத்திய அரசு கேட்கவில்லை.
1989-இல் மத்திய அரசே இப்பகுதியை உயிா்க்கோள பாதுகாப்பகமாக அறிவித்துள்ளது.
2021-இல் இப்பகுதியை இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஹைட்ரோகாா்பன் திட்டங்களை நிறைவேற்ற இப்பகுதியை மத்திய அரசு ஏலத்தில் கொடுப்பது வன்மையான கண்டத்துக்கு உரியது.
ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட பகுதிகள் பல்லுயிா் நிறைந்த பகுதிகள் என்பதால், அவற்றை இத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.
தமிழ்நாடு முதல்வா் முன்பே வேண்டுகோள் கடிதம் அனுப்பி இருந்தும், மத்திய அரசு மாநில அரசின் விருப்பத்தைப் புறக்கணித்து, கடற்பகுதியை ஏலம் விட்டு சூழலைக் கெடுப்பது என்பது ஏற்க முடியாதது. தமிழ்நாடு முதலமைச்சா் இதுகுறித்து மீண்டும் தன் எதிா்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள் இந்திய பிரதமரை ஒரு குழுவாகச் சென்று நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து தலைவா்களும் இப்பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து, பிரதமரையும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தையும், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கச் செய்ய வேண்டும்.