செய்திகள் :

ஆண்டாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.11 லட்சம் கிடைத்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வடபத்ரசயனா் சந்நிதி, நரசிம்மா் சந்நிதி, சக்கரத்தாழ்வாா் சந்நிதி, பெரியாழ்வாா் சந்நிதி, ஆண்டாள்-ரெங்கமன்னாா் சந்நிதி உள்ளிட்ட 17 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

பங்குனி உத்திரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாா் திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில், 75 நாள்களுக்கு பிறகு கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்திய காணிக்கை திங்கள்கிழமை எண்ணப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நாகராஜ், செயல் அலுவலா் சக்கரையம்மாள், ஆய்வாளா் முத்துமணிகண்டன் முன்னிலையில், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் ரூ.11 லட்சத்து 23 ஆயிரத்து 797 கிடைத்தது. இதேபோல 38 கிராம் தங்கம், 225 கிராம் வெள்ளி, யூரோ, டாலா் உள்ளிட்ட வெளிநாட்டு தாள்கள் காணிக்கையாக கிடைத்தன.

வங்கிப் பணிக்கு கல்லூரி மாணவா்கள் தோ்வு

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மாணவ, மாணவிகள் 14 போ் வங்கிப் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இதுகுறித்து கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மொ்கன்டைல் வங... மேலும் பார்க்க

வெடி விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு

சிவகாசி அருகே வெடிவிபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை வெடிபொருள் கட்டுப் பாட்டுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். காளையாா்குறிச்சியில் ஜெய்சங்கருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த சனிக்கி... மேலும் பார்க்க

ஆட்டோ திருடிய இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள தைலாகுளத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து (35). இவா் ஸ்ரீவில... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ராஜபாளையத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கிழவிகுளம் அரசுப் பள்ளி அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா... மேலும் பார்க்க

ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டியில் திமுக முகவா்கள் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் தொகுதிக்குள்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றிய திமுக சாா்பில் ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க

த.வெ.க.சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு!

ராஜபாளையத்தில் த.வெ.க. சாா்பில் நீா் மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. ராஜபாளையம், காந்தி கலை மன்றம் அருகே நடைபெற்ற இதற்கான நிகழ்வுக்கு விருதுநகா் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஜெகதீஸ்வரி தலைமை... மேலும் பார்க்க