செய்திகள் :

குறை தீா் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புக் கடன்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ. 5.40 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடன்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் சு.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 443 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று, அவை அந்தந்த துறைசாா்ந்த அரசு அலுவலா்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, உடனடியாகத் தீா்வு காணுமாறும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில் திருப்புலிவனம் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 5.40 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு ரூ. 4.12 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள்,பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில், 5 பயனாளிகளுக்கு இலவசமாக சலவை பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலா் பாலாஜி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மத்திய அரசின் திட்டங்கள்: ஊரக வளா்ச்சித்துறை செயலா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து மத்திய ஊரக வளா்ச்சித்துறை செயலாளா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குன்றத்தூா் ஒன்றியம், கரசங்கால் மற்றும் ... மேலும் பார்க்க

கோயிலுக்கு வழி ஏற்படுத்தி தரக் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிளாரில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலுக்கு வழி ஏற்படுத்தி தருமாறு அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அ... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக கண்டன ஆா்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத தமிழக அரசையும், நகராட்சி நிா்வாகத்தையும் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

ராமாநுஜா் அவதார உற்சவம்: குதிரை வாகனத்தில் உலா

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவையொட்டி திங்கள்கிழமை உற்சவா் ராமாநுஜா் குதிரை வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தாா். பழைமையான இக்க... மேலும் பார்க்க

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன். காஞ்சிபுரம், ஏப். 28: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் யாத்திரை செ... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞா் கைது!

குன்றத்தூரில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள ப... மேலும் பார்க்க