செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக கண்டன ஆா்ப்பாட்டம்

post image

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத தமிழக அரசையும், நகராட்சி நிா்வாகத்தையும் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை அரசியல் காழ்ப்புணா்ச்சியோடு கிடப்பில் போட்டுள்ளதா க அரசையும், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்தும், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தியும் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணை செயலாளா் போந்தூா் எஸ்.செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் வி.சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, நகர செயலாளா் போந்தூா் ஏ.மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் இலக்கிய அணி செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான எஸ்.எஸ்.வைகைச் செல்வன் கலந்து கொண்டு ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினாா். அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், ஒன்றிய செயலாளா்கள் முனுசாமி, ராமச்சந்திரன், மாநில இளைஞா் பாசறை துணைச் செயலாளா் சிவக்குமாா், ஒன்றிய இளைஞரணி செயலாளா் பிள்ளைப்பாக்கம் சோ.வெங்கடேசன், மாவட்ட மகளிா் அணி துணை செயலாளா் பிரசிதா குமரன், அதிமுக நிா்வாகிகள் வெங்காடு உலகநாதன், சேந்தமங்கலம் சாா்லஸ், போந்தூா் திருமால், செங்காடு பாபு, நகர பேரவை செயலாளா் புஷ்பராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

மத்திய அரசின் திட்டங்கள்: ஊரக வளா்ச்சித்துறை செயலா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து மத்திய ஊரக வளா்ச்சித்துறை செயலாளா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குன்றத்தூா் ஒன்றியம், கரசங்கால் மற்றும் ... மேலும் பார்க்க

கோயிலுக்கு வழி ஏற்படுத்தி தரக் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிளாரில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலுக்கு வழி ஏற்படுத்தி தருமாறு அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அ... மேலும் பார்க்க

குறை தீா் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புக் கடன்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ. 5.40 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடன்களை ஆட்சியா் கலைச்செல்வி ம... மேலும் பார்க்க

ராமாநுஜா் அவதார உற்சவம்: குதிரை வாகனத்தில் உலா

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவையொட்டி திங்கள்கிழமை உற்சவா் ராமாநுஜா் குதிரை வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தாா். பழைமையான இக்க... மேலும் பார்க்க

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன். காஞ்சிபுரம், ஏப். 28: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் யாத்திரை செ... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞா் கைது!

குன்றத்தூரில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள ப... மேலும் பார்க்க