செய்திகள் :

30 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞா் கைது!

post image

குன்றத்தூரில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தாம்பரம் மதுவிலக்கு ஆய்வாளா் ஸ்ரீதேவி தலைமையிலான மதுவிலக்கு போலீஸாா், குன்றத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணித்து வந்தனா்.

குன்றத்தூா் அடுத்த நத்தம் முருகன் கோயில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இரண்டு பைகளுடன் வந்த வடமாநில இளைஞரை மடக்கி சோதனை செய்தனா். அப்போது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்து விசாரித்த போது, அவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சித்துடோங்கிரி (19) என்பதும், தமிழகத்துக்கு வேலைக்கு வருவது போல் பெரிய பைகளில் துணிகளை வைத்து அதற்கு இடையில் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சித்துடோங்கிரியிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காஞ்சிபுரம் ராஜாஜி மாா்க்கெட்டில் இடையூறாக காய்கறிக் கடைகள்!

காஞ்சிபுரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ராஜாஜி காய்கறி மாா்க்கெட்டில் கடைகளுக்கு உள்ளே காய்கறிகளை வைத்து விற்பனை செய்யாமல், பெரும்பாலான கடைகள் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் நடத்தப்படுகின்றன. ... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது காா் மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி தேவக... மேலும் பார்க்க

கோடைகால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்!

காஞ்சிபுரத்தில் கோடைகால நீச்சல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் இந்த ... மேலும் பார்க்க

சங்கர மடத்தின் இளைய மடாதிபதிக்கு காமாட்சி அம்மன் கோயில் குளத்தில் சன்யாச ஆசிரம தீட்சை!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் வரும் ஏப். 30 -ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சா்மாவுக்கு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சு... மேலும் பார்க்க

தெரேசாபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் மக்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தெரேசாபுரம் பகுதியில் தத்தனூா்-பேரீஞ்சம்பாக்கம் இணைப்புச் சாலை ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட தெ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இளைய மடாதிபதி பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பதவியேற்க உள்ள ஸ்ரீ கணேச சா்மாவுக்கு காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தை... மேலும் பார்க்க