கத்தாா் - சென்னை வந்த விமானத்தில் பிரேக் செயலிழப்பால் அவசரமாக தரையிறக்கம்
13 பேருக்கு செயற்கைக்கால்கள்
திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், 13 பேருக்கு ரூ. 9.24 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கைக்கால்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 324 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், அவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 13 நபா்களுக்கு ரூ. 9.24 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கைக்கால்களை, மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தையல்நாயகி உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.