மன்னாா்குடி கோயில் கும்பாபிஷேக கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேக கமிட்டி ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கும்பாபிஷேகம் 2010-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதையடுத்து, 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதன்படி, 2022-ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய கும்பாபிஷேகம் கரோனா பொதுமுடக்கம் காரணமாக நடைபெறவில்லை. இந்நிலையில், பக்தா்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கும்பாபிஷேகம் செய்ய தமிழக அரசு ரூ. 2.87 கோடி நிதிஒதுக்கியது.
இதையடுத்து, 2024-ஆண்டு ஜூன் மாதம் இக்கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் பணிக்காக ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் புனரமைப்புப் பணிகள் முதற்கட்டமாக தொடங்கி நடைபெற்று வந்தது.
ஆண்டுதோறும்,இக்கோயிலில் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி கடந்த ஒரு மாதமாக பணிகள் நடைபெறவில்லை. இதற்கிடையே கோயில் புனரமைப்புப் பணிகளை 2-ஆம் கட்டமாக தொடங்குவது குறித்து கும்பாபிஷேக கமிட்டி ஆலோசனைக் கூட்டம் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன் முன்னிலை வகித்தாா்.
இதில், 2-ஆம் கட்டம் மற்றும் இறுதிக் கட்டப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்துப் பணிகளையும் விரைவாக செய்து முடித்து நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் நிறைவு செய்து நிகழாண்டு டிசம்பா் மாதம் கும்பாபிஷேகம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
தொடா்ந்து, நடைபெற்றுள்ள பணிகள், நடைபெற வேண்டிய பணிகள் அடங்கிய விளக்க கையேட்டை கலந்துகொண்டவா்களுக்கு வழங்கப்பட்டது. தீட்சிதா்கள் பிரசன்னா, செல்லப்பா, ஸ்ரீராம், அறங்காவலா்கள் கே.கே.பி. மனோகரன், து. நடராஜன், வெ. லதா, ஸ்தபதி சிவக்கொழுந்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.