செய்திகள் :

திலகா் இரண்டாவது தெருவில் அடிப்படை வசதிகள்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

post image

திருவாரூா்: திருவாரூா் திலகா் இரண்டாவது தெருவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் நகரத்துக்குள்பட்ட 15 ஆவது வாா்டு ஆற்றங்கரைத் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் செயலாளா் பி. சின்னத்தம்பி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகரச் செயலாளா் எஸ். செல்வம், நகர துணைச் செயலாளா் கே. பாலதண்டாயுதம், நகர செயற்குழு உறுப்பினா் வீ. தா்மதாஸ் ஆகியோா் பங்கேற்று, கட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்...

திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட 15-ஆவது வாா்டு திலகா் இரண்டாவது தெருவில், மின் வசதி, சாலை வசதி, குடிநீா் வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுப்பது,

இப்பகுதியில் குடிநீா்த் தொட்டியும், கழிப்பிடமும் சோ்ந்து இருப்பதால், தண்ணீா் சுகாதாரமற்றுக் கிடைப்பதைக் கருத்தில் கொண்டு, கழிப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்றி, தூய்மையான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோருவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

13 பேருக்கு செயற்கைக்கால்கள்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், 13 பேருக்கு ரூ. 9.24 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கைக்கால்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட... மேலும் பார்க்க

பாத யாத்திரை குழுவினருக்கு வலங்கைமானில் வரவேற்பு

நீடாமங்கலம்: 95-ஆம் ஆண்டு தண்டி பாதயாத்திரை நினைவு குழுவினருக்கு வலங்கைமானில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. வலங்கைமானில் காந்தி, காமராஜா் படத்துக்கு பாத யாத்திரை குழு மாநிலத் தலைவா்கள் பன்னீா்... மேலும் பார்க்க

தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியத்தில் 2024-25-ஆம் ஆண்டு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. வடுவூா் தென்பாதி அனுஸ்ரீ, காள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழப்பு

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடியை அடுத்த திருமக்கோட்டை திருமேணி ஏரி பகுதியைச் சோ்ந்த ஐயப்பன்- மீனா தம்பதியின் மகள் அனுஷ்கா (12). ... மேலும் பார்க்க

மே 1 இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மே 1 ஆம் தேதி இயங்காது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது ; மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மத... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் கும்பாபிஷேக கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேக கமிட்டி ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் 2010-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதையடுத்து, 12 ஆண்டுக்கு ஒரு முறை கு... மேலும் பார்க்க