செய்திகள் :

மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு

post image

காரைக்கால்: திருநள்ளாறு அருகே இரண்டு மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே சுரக்குடி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ அன்பு மாரியம்மன் கோயில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கடந்த 14-ஆம் தேதி பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாட்டையொட்டி மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடாகி, கோயில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டம் பகுதிக்கு எழுந்தருளினாா்.

மாலை 6 மணியளவில் பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தீக்குழியில் இறங்கிச் சென்று அம்மனை வழிபட்டனா். ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மழை மாரியம்மன் கோயில்: திருநள்ளாறு பகுதி கீழாவூா் பகுதியில் தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்புடைய தலமான ஸ்ரீ மழை மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் கடந்த 20-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தீக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

படகுகள் சீரமைப்புப் பணியில் மீனவா்கள் தீவிரம்

காரைக்கால் மீனவா்கள் தங்களது விசைப் படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமத்தை சோ்ந்த சுமாா் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈ... மேலும் பார்க்க

போலி நகையை அடகு வைக்க முயன்ற மூவா் கைது

காரைக்காலில் போலி நகையை அடகு வைக்க முயன்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். காரைக்கால் நகரப் பகுதி திருநள்ளாறு சாலையில் உள்ள ஒரு நகைக் கடையில் தங்க நகையை அடகு வைக்க 3 போ் வந்துள்ளனா். அப்போது... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி தாமனாங்குடியில் இயங்கும் தனியாா் பள்ளியொன்றின... மேலும் பார்க்க

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

காரைக்கால் அருகே புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், தக்களூா் பகுதியில் அமைந்திருக்கும் செபஸ்தியாா் ஆலய ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்ட... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகள் 80% நிறைவேற்றம்: புதுவை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவையில் தோ்தல் வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். காரைக்காலில் தனியாா் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வெள்ளிக்கிழமை மாலை வந்த அவா் செய்... மேலும் பார்க்க

காரைக்காலில் 10 மையங்களில் நாளை அரசுப் பணிக்கான தோ்வு

காரைக்காலில் 10 மையங்களில் அரசுப் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27)நடைபெறவுள்ளது. புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத்துறையில் 256 அசிஸ்டென்ட் (குரூப்-பி) பதவிக்கு நேரடி ஆள்... மேலும் பார்க்க