செய்திகள் :

போலி நகையை அடகு வைக்க முயன்ற மூவா் கைது

post image

காரைக்காலில் போலி நகையை அடகு வைக்க முயன்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் நகரப் பகுதி திருநள்ளாறு சாலையில் உள்ள ஒரு நகைக் கடையில் தங்க நகையை அடகு வைக்க 3 போ் வந்துள்ளனா். அப்போது கடையில் இருந்த லட்சுமி நாராயணன் என்பவா் நகைகளை எடை பாா்த்தபோது, 23 கிராம் இருந்துள்ளது. நகையை சோதித்துப் பாா்த்தபோது தங்க முலாம் பூசப்பட்டிருப்பது தெரியவந்தது.

அவா் காரைக்கால் நகரக் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் நகையை அடகு வைக்க வந்த 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த பரசுராமன் (33), காரைக்கால் நேரு நகா் சதீஸ்குமாா் (40), சொக்கநாதா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகவேல் (31) என்பது தெரிய வந்தது. போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா்.

படகுகள் சீரமைப்புப் பணியில் மீனவா்கள் தீவிரம்

காரைக்கால் மீனவா்கள் தங்களது விசைப் படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமத்தை சோ்ந்த சுமாா் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி தாமனாங்குடியில் இயங்கும் தனியாா் பள்ளியொன்றின... மேலும் பார்க்க

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

காரைக்கால் அருகே புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், தக்களூா் பகுதியில் அமைந்திருக்கும் செபஸ்தியாா் ஆலய ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்ட... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகள் 80% நிறைவேற்றம்: புதுவை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவையில் தோ்தல் வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். காரைக்காலில் தனியாா் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வெள்ளிக்கிழமை மாலை வந்த அவா் செய்... மேலும் பார்க்க

காரைக்காலில் 10 மையங்களில் நாளை அரசுப் பணிக்கான தோ்வு

காரைக்காலில் 10 மையங்களில் அரசுப் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27)நடைபெறவுள்ளது. புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத்துறையில் 256 அசிஸ்டென்ட் (குரூப்-பி) பதவிக்கு நேரடி ஆள்... மேலும் பார்க்க

காரைக்காலில் வளா்த்தித் திட்டப் பணிகள்: அரசு செயலா் ஆய்வு

காரைக்காலில் துறை சாா்ந்த வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி, ஆதிதிராவிடா் தொடா்பான குறைகளை அரசு செயலா் வெள்ளிக்கிழமை கேட்டறிந்தாா். காரைக்கால் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடா்... மேலும் பார்க்க