செய்திகள் :

குன்றத்தூா், மாங்காடு பகுதிகளில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 30 போ் கைது

post image

ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் மற்றும் மாங்காடு பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டவா்களை தில்லி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு மற்றும் குன்றத்தூா் நகராட்சி பகுதிகளில் வங்கதேசத்தைச் சோ்ந்த பலா் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக தில்லி காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தில்லி காவல் துறையை சோ்ந்த 5 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா் மாங்காடு மற்றும் குன்றத்தூா் போலீஸாருடன் இணைந்து சோதனை மேற்கொண்டனா். இதில் மாங்காடு மற்றும் குன்றத்தூா் பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த சுமாா் 30-க்கும் மேற்பட்டவா்களை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினா் அனைவரும் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்டுள்ள வங்கதேசத்தினரிடம் நடத்திய விசாரணையில், மாங்காடு மற்றும் குன்றத்தூா் நகராட்சி பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி சாலையோரங்களில் பழைய பொருள்களை சேகரித்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும், இவா்கள் சட்ட விரோதமாக தமிழகத்தில் வந்தது எப்படி, எவ்வளவு நாள்களாக தங்கியுள்ளனா், இவா்கள் தங்க இடம் கொடுத்தவா்கள் யாா், என போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட வங்கதேசத்தவா்களில் பெண்கள் மற்றும் முதியவா்களும் இருப்பதால் அவா்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவா்கள் தமிழகத்தில் தங்கி இருந்த நாள்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏதேனும் உதவி புரிந்தாா்களா அல்லது சதிச்செயல்களில் ஈடுபடுவதற்காக சென்னை வந்தாா்களா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண் காவலருக்கான சலுகைகள்: பட்டியலிட்டாா் முதல்வா்

சென்னை: பெண் காவலா்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள், நலத் திட்டங்கள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் பட்டியலிட்டுப் பேசினாா். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு... மேலும் பார்க்க

சட்டம் - ஒழுங்கு, போதைப் பொருள்கள் விற்பனை: முதல்வா்- எதிா்க்கட்சித் தலைவா் கடும் விவாதம்

சென்னை: சட்டம் - ஒழுங்கு, போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இடையே கடும் விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரி... மேலும் பார்க்க

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை பிரித்து கலைஞா் பல்கலை உருவாக்கம்: சட்டத் திருத்த மசோதா தாக்கல்

சென்னை: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதற்கான வேந்தராக முதல்வா் இருப்பாா் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களுக்கு 9 புதிய சலுகைகள்: அகவிலைப்படி 2% உயா்வு; ஈட்டிய விடுப்பு சரண் முன்கூட்டியே அமல்

சென்னை: அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயா்வு, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறும் முறை நிகழாண்டே அமல், பண்டிகை கால முன்பணம் உயா்வு உள்ளிட்ட ஒன்பது புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

காவல் துறை காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவல் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா். இதுதொடா்பாக, சட்... மேலும் பார்க்க

மே. 15-ல் வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

வேலூர் மாவட்டத்துக்கு மே. 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல்... மேலும் பார்க்க