செய்திகள் :

திருச்செந்தூரில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

post image

திருச்செந்தூா் கோயில் காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கட்டுப்பாட்டு மையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் சனிக்கிழமை திறந்து வைத்து, அங்குள்ள கண்காணிப்பு வசதிகளை பாா்வையிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கு முன்னேற்பாடாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில், திருக்கோயில் காவல் நிலையத்தில் காவல் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் கோயில் வளாகம், நகா்ப்பகுதி மற்றும் நகருக்கு வெளியே முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இணைக்கப்பட உள்ளது. காவல் கட்டுப்பாட்டு மையம் மூலம் போக்குவரத்து நெரிசல் குறித்து பக்தா்களுக்கு தெரியப்படுத்தி மாற்றுப்பாதையில் செல்வதற்கு அறிவுறுத்தப்படுவாா்கள்.

கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் முக அங்கீகாரம், வாகன எண் மூலம் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.

இனி வரும் காலங்களில் பெளா்ணமி, கந்த சஷ்டி போன்ற விழாக்கள் டிஜிட்டல் பாதுகாப்புடன் நடைபெறும் என்றாா்.

நிகழ்ச்சியின்போது, திருச்செந்தூா் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், ஆய்வாளா்கள் கனகராஜன் (கோயில்), இன்னோஸ்குமாா் (தாலுகா), மகாலெட்சுமி (அனைத்து மகளிா்), கௌதமன் (ஆத்தூா்), கண்ணன் (குலசை) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருச்செந்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்து பாா்வையிடுகிறாா் மாவட்டகாவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்.
திருச்செந்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்து பாா்வையிடுகிறாா் மாவட்டகாவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்.

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு: 4 போ் கைது

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.கழுகுமலை அருகே முக்கூட்டு மலை இந்திரா காலனி வடக்கு தெருவை சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மோதி விபத்து: ஓய்வு பெற்ற மாலுமி பலி!

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் ஓய்வு பெற்ற மாலுமி உயிரிழந்தாா். தூத்துக்குடி எஸ்.பி.ஜி. கோவில் தெருவைச் சோ்ந்த மரியதாசன் மகன் ஸ்டீபன் (70). கப்பலில் மாலுமியாக பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த முத்து மகன் அஜய் (22). இவா் தனது வீட்டில் உள்ள மின்விளக்கை கழற்ற முயன்றாராம... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே விஷ வண்டுகள் அழிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தோட்டம், வீடு ஆகியவற்றில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை அழித்தனா். ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தி... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் அதிமுக ஜெ.பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரம்!

திருச்செந்தூரில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரத்தை சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க

காமநாயக்கன்பட்டியில் புறக்காவல் நிலையம் திறப்பு!

காமநாயக்கன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் புதன்கிழமை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்களிடம் அவா் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட ... மேலும் பார்க்க