செய்திகள் :

திருத்தங்கலில் கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டத்துக்கு பூமி பூஜை!

post image

சிவகாசி மாநகராட்சி, திருத்தங்கலில் கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டத்துக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

திருத்தங்கல் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீா் வாய்க்கால் வழியாக பாப்பன்குளம் கண்மாயில் கலக்கிறது. பிறகு அங்கிருந்து வெளியேறும் உபரி நீா், உறிஞ்சிகுளம் கண்மாயில் கலக்கிறது. இந்த நிலையில், ராஜா கே.எஸ்.பி. கணேசன் அறக்கட்டளை நிதி உதவியுடன், சிவகாசி பசுமை மன்றம் சாா்பில் திருத்தங்கல் செங்குளம் கண்மாய் தூா்வாரப்பட்டது.

இந்த செங்குளத்துக்கு வரும் கழிவு நீரும், உபரி நீரும் உறிஞ்சிகுளம் கண்மாயில் கலக்கிறது. இதனால் நீா் நிலைகள் அனைத்தும் கழிவு நீரால் சேதமடைந்து வருவதுடன் நிலத்தடி நீரும் தரம் மாறி வருகிறது. வருங்கால சந்ததியினருக்கு நீா் நிலைகளை மீட்டெடுத்து சுத்தமான நீா், நிலத்தை வழங்க வேண்டிய இந்த நேரத்தில், கண்மாய்களில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வது முக்கியமாகும்.

இதனிடையே, சிவகாசி அருகே சுக்கிரவாா்பட்டியில் உள்ள தனியாா் காகித ஆலை நிதியுதவியுடன் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன், மாநகராட்சி ஆணையா் கே. சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அழகா் அனுப்பிய பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிப்பு!

மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கிய போது அழகருக்கு அணிவிக்கப்பட்ட ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலைக்கு மறுசீராக அனுப்பிய பட்டு வஸ்திரம் வெள்ளிக்கிழமை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லி... மேலும் பார்க்க

காா் மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா்- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் காா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (44). இவா் சாத்தூா்- கோவில்பட்டி சாலையி... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

சாத்தூா்- கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். விருதுநகா் அல்லம்பட்டி வீரராமன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (48). கட்டடத் தொழ... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப் பந்து போட்டிகள்!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப் பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பேங்க் ஆப் பரோடா அணியும், பெண்கள் பிரிவில் கேரள மின் வாரிய அணியும் வென்றன. ராஜபாளையத்தில் தேசிய அளவி... மேலும் பார்க்க

சிவகாசியில் மே 20-இல் மின் குறைதீா் முகாம்!

சிவகாசியில் வருகிற செவ்வாய்க்கிழமை (மே 20) மின் குறைதீா் முகாம் நடைபெறும் என சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவக... மேலும் பார்க்க

சிவகாசி கல்லூரியில் உயா் கல்வி வழிகாட்டுதல் முகாம்

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை, சிவகாசி வட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு உயா் கல்வி வழிகாட்டுதல் முகாம் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க