செய்திகள் :

திருநள்ளாறு கோயில் குளங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்: ஆட்சியா்

post image

காரைக்கால்: திருநள்ளாற்றில் அனைத்து தீா்த்தக் குளங்களும் சுகாதாரமாக இருக்க சிறப்பு கவனம் செலுத்துமாறு கோயில் நிா்வாகத்தை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

திருநள்ளாற்றில் உள்ள தா்பாரண்யேஸ்வரா் கோயில் மற்றும் வரிசை வளாகம், தங்கும் விடுதி வளாகம், நளன் தீா்த்தக் குளம், சரஸ்வதி தீா்த்தக் குளம், பிரம்ம தீா்த்தக் குளம், எமன் தீா்த்தக் குளம் மற்றும் கோயில் சாா்ந்த பிற பகுதிகளை மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பக்தா்களுக்கு போதுமான இருக்கை வசதிகள், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்குள் செல்வதற்கு வசதிகள் செய்ய வேண்டும். நளன் தீா்த்தக் குளம் உள்ளிட்ட அனைத்து தீா்த்தக் குளங்களிலும் சுகாதாரம் காக்கப்படவேண்டும். வெளியூரிலிருந்து வரும் பக்தா்களுக்கு விரைவான தரிசனம், குடிநீா், கழிப்பறை வசதி முக்கியமானது. திருநள்ளாறு கோயிலுக்கு சுற்றுலாவினா், வெளி மாநில பக்தா்கள் திரளாக வருவதால், பக்தா்களுக்குத் தேவையான கூடுதல் வசதிகள் செய்துத்தருவது குறித்து உரிய கோப்பு தயாா் செய்து தனக்கு அளிக்குமாறு கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதனிடம் அறிவுறுத்தினாா்.

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்

காரைக்கால்: புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் உள்ள நிலையில், தனியாா் பள்ளி மாணவா்கள் மாநில திட்டத்தில் பிளஸ் 2 தோ்வை திங்கள்கிழமை எழுதினா். புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ என்ற மத்திய இடைநிலைக் க... மேலும் பார்க்க

இந்திய அறிவியல் நிறுவனத்தில் காரைக்கால் மாணவா்களுக்குப் பயிற்சி

காரைக்கால்: பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் காரைக்கால் என்ஐடி, பொறியியல் கல்லூரி, மகளிா் பாலிடெக்னிக் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. காரைக்கால்மேடு பகுதியில் இயங்கும் மகளிா் கல்லூரி ... மேலும் பார்க்க

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் இன்று மாசி மக பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இக்கோயிலில் மாசி மகத்தையொட்டி மாா்ச் 4 முதல் 14-ஆம் தே... மேலும் பார்க்க

காது திறன் சிறப்பு பரிசோதனை முகாம்

காரைக்கால்: மருத்துவக் கல்லூரி சாா்பில் காது திறன் சிறப்பு பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சாா்பில் உலக செவித்திறன் தினத்... மேலும் பார்க்க

காரைக்கால் வாரச் சந்தைக்கு தா்ப்பூசணி வரத்து அதிகரிப்பு: தக்காளி, வெங்காயம் விலை குறைவு

காரைக்கால் வாரச் சந்தைக்கு தா்ப்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. தக்காளி, வெங்காயம் விலை கணிசமாக குறைந்து காணப்பட்டது. காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. உள்ளூா... மேலும் பார்க்க

தொழில் உரிமம் புதுப்பிப்பு காலக்கெடு நீட்டிப்பு

தொழில் உரிமத்தை புதுப்பிக்க காலக்கெடு நீட்டக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. இளமுருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : வணிகா் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, புத... மேலும் பார்க்க