செய்திகள் :

திருப்பதியில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசனம் யாருக்குக் கிடைக்கும்?

post image

திருப்பதி திருமலையில், ஸ்ரீவாணி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக புதிய டிக்கெட் வழங்கும் மையம் கோயில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு வசதியாக, திருமலை அன்னமய்ய பவனுக்கு எதிரே புதிய ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையத்தை செவ்வாய்க்கிழமை அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, செயல் அதிகாரி சியாமளா ராவ் ஆகியோா் திறந்து வைத்தனா்.

ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் பெறுவதற்கு, பக்தர்கள் அதிகாலை 5 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்த வருவதாக, நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னை, இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இனி இருக்காது. ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த மையத்தில், பக்தர்கள் விரைவாகவும் எளிதாகவும் டிக்கெட் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவாணி தரிசனம் யாருக்கு?

திருப்பதி திருமலை கோயிலில், பராமரிப்பு, உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீவாணி அறக்கட்டளையானது, திருமலை ஏழுமலையான் பக்தர்கள் பலரும் அளிக்கும் நன்கொடை மூலமாகவே செயல்பட்டு வருகிறது.

எனவே, தன்னுடைய செயல்பாடுகளுக்கு அடிப்படையாக இருக்கும், நன்கொடை அளிக்கும் பக்தர்களை கௌரவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதே ஸ்ரீவாணி தரிசனம். அந்த வகையில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் முதல் நன்கொடை அளிக்கும் பக்தர்கள், சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதுதான் ஸ்ரீவாணி தரிசனம்.

இந்த ஸ்ரீவாணி தரிசன முறையில், நாள்தோறும் சரியாக 1000 பேருக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதனை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாக மையங்களுக்கு வந்தும் பெற்றுக் கொள்ளலாம். முதற்கட்டமாக, திருமலை மற்றும் ரேணிகுண்டா விமான நிலையங்களில் தலா ஒரு டிக்கெட் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில்லாமல், திருமலை திருப்பதி கோயிலில், தற்போது ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விநியோக மையம் திறக்கப்பட்டுள்ளது. இது, ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் வழங்கும் பணியை துரிதப்படுத்தும் என்பதால் நன்கொடை வழங்கும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!

வயநாடு நிலச்சரிவில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்த நௌஃபல், தன்னம்பிக்கையோடு, உணவகம் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் ஜூலை 30.சோகம், தன்னம்பிக்கை, உத்வேகம், நம்பிக்கை என பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்த... மேலும் பார்க்க

பிரிட்டனில் பிரதமர் மோடியை டீ விற்பவர் என கிண்டல்?

பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிர... மேலும் பார்க்க

குஜராத் மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கலந்துரையாடினார். காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாவட்ட பிரிவுகளின் தலைவர்களுக்கும் மூன்று நாள் பய... மேலும் பார்க்க

சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறிய... மேலும் பார்க்க

உலகளவில் பெரும் மதிப்புடைய தலைவர்கள்! பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.உலகளவில் அதி நம்பிக்கையான மற்றும் பெரும் மதிப்புடைய தலைவர்களின் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க