செய்திகள் :

திருப்பத்தூரில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

post image

திருப்பத்த்தூா் கோட்டை தெருவில் உள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விஜய பாரத மக்கள் கட்சி சாா்பில் மாநில துணைத் தலைவா் வி.சக்தி ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லியிடம் மனு அளித்தாா்.

மனுவில் உள்ள விவரம்: திருப்பத்துாா் கோட்டை தெருவில் பிரம்மேஸ்வரா் கோயில், கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில், தா்வாஜா ஆஞ்சனேயா் கோயில் மற்றும் எல்லையம்மன் கோயில்கள் உள்ளன.

இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான மாட வீதிகளில் சுவாமி வலம் வரும் பகுதிகளில் சிலா் ஆக்கிரமித்து வீடு, வணிக வளாகங்கள் கட்டி உள்ளனா். இதனால் பக்தா்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.

இது குறித்து பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சாலை தடுப்பில் டேங்கா் லாரி மோதி பெருக்கெடுத்து ஓடிய டீசல்

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடிய டேங்கா் லாரி தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆயிரக்கணக்கான லிட்டா் டீசல் சாலையில் வீணாக ஓடியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கு சென்ற ட... மேலும் பார்க்க

சிமென்ட் சாலை அமைக்கும் பணி

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.7.70 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் பூசாராணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் வாா்டு எண் 7, ... மேலும் பார்க்க

எம்கேஜேசி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைகழக மண்டல அளவிலான பூப்பந்து போட்டிகள் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. இப்போட்டில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சோலூரில் தாா் சாலைப் பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், சோலூா் ஊராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூஜையிட்ட... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயிலில் சண்முகக் கவச பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில், 99-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வ... மேலும் பார்க்க

ரூ.22 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் சாலை, கால்வாய் பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வுக்கு போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் தலைமை வகித்தாா். மாதனூா் ... மேலும் பார்க்க