செய்திகள் :

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தேக்கு, வேப்பமரம், வாகை உள்ளிட்ட மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன.

இந்த பூங்கா, சுற்றுப்புற மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அங்கிருக்கும் இயற்கை சூழலில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொண்டுவந்தனர்.

பூங்கா

இந்நிலையில், நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் 20-க்கும் மேற்பட்ட மரங்களைக் கடந்த சில நாள்களுக்கு முன் இரவோடு இரவாக வெட்டி, சிலர் கடத்தியுள்ளனர். இதில் 4வது வார்டு திமுக கவுன்சிலர் வித்யாவின் கணவர் சுரேஷுக்கும் பங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மறுநாள் நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள், பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். மரங்களை வெட்ட உரிய அனுமதி பெறப்படவில்லை எனவும், சட்ட விரோதமாக மரங்களை வெட்டி கடத்தியதாகவும், ஜோலார்பேட்டை நகராட்சி கமிஷனர் பிரான்சிஸ் சேவியர், கவுன்சிலரின் கணவர் சுரேஷ் மீது ஜோலார்பேட்டை போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, ``மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் வனத்துறையிலும் தனித்தனியாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது . விசாரனை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை - இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம்... மேலும் பார்க்க

NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் துரைமுருகன் நடத்திவரும் `சாட்டை` யூட்யூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கிறார் சீமான். முன்னணி நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர்தா... மேலும் பார்க்க

வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை சந்தை; திறக்கப்படுவது எப்போது? - காத்திருக்கும் வியாபாரிகள்!

பாளையங்கோட்டை புதிய மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், நெல்லை மக்... மேலும் பார்க்க

`Wifi முதல் மின்சார உற்பத்திவரை' - இந்தியாவின் முதல்`Smart Village' இப்போது எப்படி இருக்கிறது?

``காலேஜ் படிச்சிட்டு இருக்குற இவன் எதுக்கு பஞ்சாயத்து தலைவர போய் பாக்குறான்... அவர் என்கிட்ட வந்து 'என்னப்பா உன் புள்ளை என்கிட்ட கேள்விலாம் கேக்குறான்... என்னனு கவனிக்க மாட்டியானு' மொறக்கிறாரு..." என ... மேலும் பார்க்க

TASMAC Raid: "பொய் தகவல் கூறி வழக்கை திசைதிருப்ப முயற்சி" - தமிழக அரசை குற்றம்சாட்டும் அமலாக்கத்துறை

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்குகள், இன்று நீதி... மேலும் பார்க்க